மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் வங்கதேசத்தினர் வெளியேற்றப்படுவார்கள்

 பிகாரில் இருந்து இங்குவரும் மக்களையும், ஒடிஸாவிலிருந்து இங்கு வருவோரையும் மார்வாரிகளையும் விரட்டி அடிக்கிறீர்கள். ஆனால் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை தாராளமாக அனுமதிக்கிறீர்கள், மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்குவந்தால், நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர் வெளியேற்றப்படுவார்கள் என்று பா.ஜ.க பிரதமர் பதவிவேட்பாளர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் செராம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது: இங்கு திரளாககூடி இருக்கும் சகோதர, சகோதரிகளே, நீங்கள் ஒன்றை இப்போதே எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 16ஆம் தேதிக்குப்பிறகு, நமது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர் அனைவரும் மூட்டை, முடிச்சுகளை தூக்கிக்கொண்டு தங்களது நாட்டைநோக்கி வெளியேற வேண்டியிருக்கும்.

வாக்குவங்கியாக கருதி மம்தா பானர்ஜி வங்க தேசத்தினரை வெளியேற்றாமல் விட்டுவிட்டார். வங்க தேசத்தினரை மம்தா பானர்ஜி சிவப்புகம்பளம் விரித்து வரவேற்கிறார்.

பிகாரில் இருந்து இங்குவரும் மக்களையும், ஒடிஸாவிலிருந்து இங்கு வருவோரையும் மார்வாரிகளையும் விரட்டி அடிக்கிறீர்கள். ஆனால் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை தாராளமாக அனுமதிக்கிறீர்கள். அவர்களை மனமுவந்து வரவேற்கிறீர்கள்.

வாக்குவங்கி அரசியல் மூலம் மம்தா பானர்ஜி இந்நாட்டு மக்களை தொடர்ந்து அவமதித்துவருகிறார். இடதுசாரிகள் 35 ஆண்டுகள் இந்த மாநிலத்தை சீரழித்ததைவிட மம்தாபானர்ஜி 35 மாதங்களில் கூடுதலாக சீரழித்துள்ளார்.

இனி, வாக்குவங்கி அரசியல் ஒருபோதும் எடுபடாது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் நாட்டின்வளர்ச்சி, நல்லாட்சி குறித்துதான் பேசி வருகிறேன்.

நான் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து பேசும் போதும், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து பேசும் போதும், பெண்களுக்கான பாதுகாப்புகுறித்து பேசும்போதும் எதிர்க்கட்சியினர் பேசும் ஒரே வார்த்தை மதச்சார்பின்மைதான். அவர்கள் இதுதவிர வேறு எதுவும் பேசமுடியாது.

தற்போது மம்தா பானர்ஜி, சோனியாகாந்தி, இடதுசாரி கட்சிகள், மாயாவதி போன்றோர் வாக்குவங்கி அரசியலில் தான் ஈடுபட்டு வருகிறார்கள் என்று மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...