தே.ஜ.,கூட்டணி ஆட்சியமைக்க ஆதரவு தரவிரும்பும் கட்சிகளை வரவேற்கிறோம்

 தேசிய நலனைக் கருத்தில்கொண்டு, மத்தியில் தே.ஜ.,கூட்டணி ஆட்சியமைக்க ஆதரவு தரவிரும்பும் கட்சிகளை வரவேற்கிறோம்” என பாஜக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அமித்ஷா, தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தேர்தலில் 290 இடங்களிலிருந்து 305 இடங்கள்வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும். உத்தரப் பிரதேசத்தில் 50 முதல் 55 இடங்கள் வரை பாஜக கைப்பற்றும். தேர்தலில் 272 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்துடன் போட்டியிட்டோம். நிச்சயம் அத்தனை இடங்களில் பாஜக கூட்டணி வெற்றிபெறும்.

தேர்தலில் ஒரு இடத்தை கைப்பற்றும் கட்சிகூட, பாஜக கூட்டணிக்கு ஆதரவு தர விரும்பினாலும், தேசிய நலன் கருதி வரவேற்போம். கூட்டணியில் சேர்வதுதொடர்பாக பிற கட்சிகளுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்துகிறதா? என கேட்கிறீர்கள். ஆனால் இந்தகேள்விக்கு என்னால் பதிலளிக்க இயலாது. எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற பாஜக மூத்த தலைவர்களின் எதிர் கால பணி குறித்து கட்சியின் ஆட்சிமன்றக் குழு முடிவுசெய்யும்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்காக அந்தமாநிலத்தை 30 பகுதிகளாக பிரித்து, அதற்கேற்ற செயல் திட்டங்களை வகுத்து செயல்பட்டோம். உ.பி.,யின் மேற்கு மற்றும் கிழக்குப்பகுதியில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும். பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.