அமித் ஷா, அருண்ஜெட்லி ஆகியோருடன் மோடி ஆலோசனை

 மத்திய அமைச்சரவை அமைப்பதை முன்னிட்டு, பிரதமராக பொறுப்பு ஏற்கவுள்ள நரேந்திர மோடி, பாஜக பொதுச் செயலாளர் அமித்ஷா, பா.ஜ மூத்த தலைவர் அருண்ஜெட்லி ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றிபெற்ற புதிய பா.ஜ எம்.பிக்கள், மோடியை பா.ஜ நாடாளுமன்ற கட்சி தலைவராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கவுள்ளனர். 21ம் தேதிக்குப்பின் மோடி, பிரதமராக பதவி ஏற்பார் . டெல்லியில் உள்ள குஜராத் பவனில் தங்கியுள்ள மோடி கடந்த இருநாட்களாக பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து, அமைச்சரவை அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

இந்த ஆலோசனை நேற்றும் தொடர்ந்தது.குஜராத் பவனில் அமித் ஷா, அருண்ஜெட்லி ஆகியோருடன் மோடி நேற்றும் ஆலோசனை நடத்தினார். லோக்சபா தேர்தலில் அருண்ஜெட்லி தோல்வியடைந்தாலும், அவர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது. முன்னாள் உ.பி முதல்வரும், பா.ஜ மூத்த தலைவருமான கல்யான் சிங்கும் மோடியை நேற்று சந்தித்து பேசினார். மத்திய அமைச்சரவை அமைப்பது குறித்து பா.ஜ தலைவர்கள் ராஜ்நாத் சிங் வீட்டிலும் நேற்று ஆலோசனை நடந்தது.

இது குறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், ”பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் புதிய எம்பி.க்கள் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கையும், ஆர்எஸ்எஸ் தலைவர்களையும் சந்தித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் உள்ள பழைய தொடர்பால் புதிய எம்பி.க்கள் இங்கு மரியாதை நிமித்தமாக வந்து, தேர்தலில் ஆர்எஸ்எஸ் ஆற்றிய பணிக்காக நன்றி தெரிவிக்கின்றனர். இன்று நடைபெறும் கூட்டத்தை பற்றித்தான் அவர்கள் பேசுகிறார்கள். வேறு எதையும் பற்றி பேசவில்லை” என்றார்.

மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மாசுவராஜ், நிதின் கட்கரி, அனந்த குமார், கல்யாண்சிங் உள்பட பலருக்கும் எந்த துறைகள் ஒதுக்கப்படலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மக்களவை தேர்தலில் பாஜக.வுக்கு பெரும்வெற்றியை பெற்றுத் தந்த உ.பி., பீகார், அசாம், குஜராத், ராஜஸ்தான், ம.பி. போன்ற மாநிலங்களுக்கு உரிய பிரதிநித்துவம் அமைச்சரவையில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...