அமித் ஷா, அருண்ஜெட்லி ஆகியோருடன் மோடி ஆலோசனை

 மத்திய அமைச்சரவை அமைப்பதை முன்னிட்டு, பிரதமராக பொறுப்பு ஏற்கவுள்ள நரேந்திர மோடி, பாஜக பொதுச் செயலாளர் அமித்ஷா, பா.ஜ மூத்த தலைவர் அருண்ஜெட்லி ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றிபெற்ற புதிய பா.ஜ எம்.பிக்கள், மோடியை பா.ஜ நாடாளுமன்ற கட்சி தலைவராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கவுள்ளனர். 21ம் தேதிக்குப்பின் மோடி, பிரதமராக பதவி ஏற்பார் . டெல்லியில் உள்ள குஜராத் பவனில் தங்கியுள்ள மோடி கடந்த இருநாட்களாக பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து, அமைச்சரவை அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

இந்த ஆலோசனை நேற்றும் தொடர்ந்தது.குஜராத் பவனில் அமித் ஷா, அருண்ஜெட்லி ஆகியோருடன் மோடி நேற்றும் ஆலோசனை நடத்தினார். லோக்சபா தேர்தலில் அருண்ஜெட்லி தோல்வியடைந்தாலும், அவர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது. முன்னாள் உ.பி முதல்வரும், பா.ஜ மூத்த தலைவருமான கல்யான் சிங்கும் மோடியை நேற்று சந்தித்து பேசினார். மத்திய அமைச்சரவை அமைப்பது குறித்து பா.ஜ தலைவர்கள் ராஜ்நாத் சிங் வீட்டிலும் நேற்று ஆலோசனை நடந்தது.

இது குறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், ”பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் புதிய எம்பி.க்கள் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கையும், ஆர்எஸ்எஸ் தலைவர்களையும் சந்தித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் உள்ள பழைய தொடர்பால் புதிய எம்பி.க்கள் இங்கு மரியாதை நிமித்தமாக வந்து, தேர்தலில் ஆர்எஸ்எஸ் ஆற்றிய பணிக்காக நன்றி தெரிவிக்கின்றனர். இன்று நடைபெறும் கூட்டத்தை பற்றித்தான் அவர்கள் பேசுகிறார்கள். வேறு எதையும் பற்றி பேசவில்லை” என்றார்.

மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மாசுவராஜ், நிதின் கட்கரி, அனந்த குமார், கல்யாண்சிங் உள்பட பலருக்கும் எந்த துறைகள் ஒதுக்கப்படலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மக்களவை தேர்தலில் பாஜக.வுக்கு பெரும்வெற்றியை பெற்றுத் தந்த உ.பி., பீகார், அசாம், குஜராத், ராஜஸ்தான், ம.பி. போன்ற மாநிலங்களுக்கு உரிய பிரதிநித்துவம் அமைச்சரவையில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...