பிணைத் தொகை செலுத்த மறுத்த கெஜ்ரிவாலுக்கு சிறை

 பாஜக., மூத்த தலைவர் நிதின்கட்காரி தொடர்ந்த, அவதூறு வழக்கில், பிணைத் தொகை செலுத்த மறுத்ததை அடுத்து, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இரண்டு நாள் சிறைத்தண்டனை விதித்து, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர், திகார்சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த்கெஜ்ரிவால், சில மாதங்களுக்கு முன், இந்தியாவில், ஊழல்மிகுந்த அரசியல்வாதிகள் என்ற பட்டியலை வெளியிட்டார். இந்தபட்டியலில், பாஜக, மூத்த தலைவர் நிதின் கட்காரியின் பெயரும் உண்மைக்கு புறம்பாக இடம்பெற்று இருந்தது.

இதையடுத்து, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில், கெஜ்ரிவாலுக்கு எதிராக, கட்காரி, அவதூறுவழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கு, மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாஜிஸ்திரேட், இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கெஜ்ரிவால், 10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகைசெலுத்தி, ஜாமின் பெறலாம், என்றார். இதை ஏற்க மறுத்த கெஜ்ரிவால், நான், எந்த தவறும் செய்யவில்லை. செய்யாத குற்றத்துக்காக, ஜாமின்பெற விரும்பவில்லை நான் சிறை செல்ல தயாராக உள்ளேன் என்று வீரவசனம் எல்லாம் பேசினார் ,

ஜாமின் மனு தாக்கல் செய்வது, வழக்கமான நடைமுறை. கெஜ்ரிவால், இதை ஏன் ஏற்க மறுக்கிறார் என, தெரியவில்லை. ஏதாவது சிறப்புசலுகை கோருகிறாரா? என்று மாஜிஸ்திரேட் கோமதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், நான் எந்த சிறப்பு சலுகையும் கோரவில்லை, என்றார்.

இதையடுத்து, நீதிபதி கோமதி, தன் உத்தரவில் கூறியதாவது: கிரிமினல் வழக்குகளில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையே, இந்த வழக்கிலும் பின்பற்றப் படுகிறது. இந்த நடைமுறையில், தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, கெஜ்ரிவால் கூறுகிறாரா என தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர், தன் விருப்பத்துக்கு ஏற்ப, சட்ட நடைமுறைகளை தூக்கி எறிவதையும், சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதையும், இந்த கோர்ட், வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர், பிணைத்தொகை செலுத்த முடியாத அளவுக்கு ஏழை அல்ல. பிடிவாத போக்கு காரணமாக, பிணைத் தொகை செலுத்த மறுக்கிறார். எனவே, பிணைத் தொகை செலுத்த மறுத்த கெஜ்ரிவாலை, வரும், 23ம் தேதி வரை, சிறையில் அடைக்க, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார். அதிரடியான இந்த தீர்ப்பை எதிர்பார்க்காத கெஜ்ரிவால், அதிர்ச்சியில் உறைந்துபோனார். இதையடுத்து, போலீசார், அவரை, நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ள, சிறைக்கு அழைத்துச்சென்று, காவலில் வைத்தனர். இதன்பின், திகார் சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். அங்கு, அவர், இரண்டு நாட்கள் அடைக்கப்பட்டிருப்பார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...