மோடிக்கு கலாமின் மூன்று முத்தான அறிவுரைகள்

 முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் நரேந்திரமோடி பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டதும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். சுமார் 10 நிமிடங்கள் மோடியிடம் பேசிய அப்துல்கலாம் 3 முக்கிய அறிவுரைகளை கூறினார்.

இந்தியாவில் மொத்தம் சுமார் 20 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. இதில் 15 கோடி குடும்பங்கள் இன்னமும் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளன. அவர்களை வறுமையில் இருந்து மீட் டெடுங்கள். அது மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்திலும் சம்ப£திக்கும் ஆற்றலை உருவாக்குங்கள் என்று அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.

அடுத்து நதிநீர் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மோடியிடம் அப்துல்கலாம் அறிவுறுத்தினார். இதற்காக தேசிய நீர்வழிப்பாதை திட்டத்தை அமல் படுத்த கேட்டுக் கொண் டார். நதிகளை இணைத்து உருவாக்கப்படும் இந்த திட் டத்தால் நாடெங்கும் உள்ள 6 லட்சம் கிராமங்களும் நகரங்களும் தடையின்றி தண்ணீர் பெறுவது உறுதிப் படுத்தப்படும் என்றார்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால் கடும்வறட்சி காலத்தில்கூட எந்த ஊரிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதுபோல நிறைய மழைபெய்யும் போது, மழை தண்ணீரை மற்ற பகுதிகளுக்கு திருப்பி விட்டு வெள்ளத்தால் ஏற்படும் அழிவுகள், சேதங்களை தவிர்க்க முடியும் என்றும் மோடியிடம் அப்துல் கலாம் விளக்கிக் கூறினார்.

மூன்றாவதாக வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்வதிலும் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். இந்தியாவில் சுமார் 6 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்து கொண்டிருப்பதாக கூறிய அப்துல்கலாம், அவர்களுக்கு உரியவேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் இந்தியாவில் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியும் செழிப்பும் உண்டாகும் என்றார். அப்துல்கலாம் சொன்ன இந்த 3 அறிவுரைகளையும் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார்.

உங்கள் அறிவுரைகளை ஏற்று நல்லாட்சிசெய்து, நாட் டின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை ஏற் படுத்துவேன் என்று கலாமிடம் மோடி உறுதியளித்தார். இதற்காக மோடிக்கு அப்துல்கலாம் தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...