அ தி மு க. மற்றும் கூட்டணி கட்சிகள் பா.ஜ.வுடன் சேர வேண்டும்; பங்காரு லட்சுமணன்

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி மாற வேண்டும் என்றால், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் பா.ஜ.,வுடன் சேர வேண்டும்,” என, முன்னாள் தேசிய தலைவரும், மாநில தேர்தல் பொறுப்பாளருமான பங்காரு லட்சுமணன் தெரிவித்தார்.

மதுரையில், நேற்று நடந்த 20 மாவட்ட சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் ஊழல் முக்கிய பிரச்னையாகும். ஸ்பெக்ட்ரம்

ஊழலைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு மெகா ஊழல் வெளியாகியுள்ளது.விலைவாசி உயர்வுக்கும், ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. யூக பேர வணிகத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் வரும் அறிகுறி இல்லை. அறுபது ஆண்டுகளில் எந்த அரசிலும் இல்லாத அளவுக்கு, தற்போதைய காங்., கூட்டணி அரசில் அதிக பட்ச ஊழல்கள் வெளியாகின்றன.தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு நிதியை பயன்படுத்தி, இலவச கலர் “டிவி’, ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குகின்றனர். இதைக் கண்டித்து சேலத்தில் பேரணி நடத்தப்படும்.

சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்க பா.ஜ., விரும்புகிறது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி மாற வேண்டும் என நினைத்தால், அ.தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும். அ.தி.மு.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் இருந்தாலும் ஆட்சேபனை இல்லை. தி.மு.க.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் திரள பா.ஜ., விரும்புகிறது. எந்த கட்சியும் வராத பட்சத்தில் பா.ஜ., தனித்து தேர்தலை சந்திக்கும்.இவ்வாறு பங்காருலட்சுமணன் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...