மோடிக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பது எல்லாம் கிடையாது

 பிரதமர் நரேந்திரமோடி, இரண்டு, மூன்று நிமிடங்களில், முடிவுகளை எடுக்கிறார். அவருக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பது எல்லாம் கிடையாது. தன் முடிவால் எத்தனை பேர் பயனடைவர் என்பதிலேயே, அவர் அதிக அக்கறையை காட்டுகிறார்,” என, மத்திய சட்டமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார் .

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது ;

சாதாரண குடும்பத்தை சேர்ந்த, நரேந்திரமோடி பிரதமரானது மற்றும் அவரின் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சிறப்பான செயல் பாடுகளை பார்த்து, உலகில் பெரிய மற்றும் சக்திவாய்ந்த நாடுகளான, சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசிலும், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் வியப்படைந்துள்ளன. மோடி பிரதமரானபின், டில்லியில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்களில், புதியபணி கலாசாரம் துவங்கியுள்ளது.

காலை, 9:00 மணிக்கு அலுவலகம் வந்துவிடும் அவர், எப்போது வீடு திரும்புவார் என்பதை, யாரும்சொல்ல முடியாது. அவருக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பது எல்லாம் கிடையாது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க, அவருக்கு இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு மேலாவதில்லை. முடிவு எடுக்கும்போது, அதனால், எவ்வளவு மக்கள் பயன் அடைவர் என்பதை கருத்தில்கொண்டே எடுக்கிறார்.

கடந்த, மே, 26ம்தேதி, காலை, 9:00 மணிக்கு, பிரதமர் மோடியிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, குஜராத்பவனுக்கு வரும்படி கூறிய அவர், ‘மாலையில், நாமெல்லாம் அமைச்சர்களாக பதவியேற்க வேண்டும்’ என, தெரிவித்தார். அப்போதுதான், யாரெல்லாம், மத்திய அமைச்சர்கள் ஆகின்றனர் என்ற விவரமே, எனக்கு தெரிய வந்தது. முந்தைய காங்கிரஸ் அரசில் எல்லாம், அமைச்சர்கள் தேர்வில், ஆதரவாளர்கள் மற்றும் இடைத் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால், இந்த அரசில், ஒவ்வொருவரின் தகுதி அடிப்படையில், அவர்களை, பிரதமர் மோடி அமைச்சராக நியமித்துள்ளார்.

நான் இப்போது, மத்திய அமைச்சராக இருப்பதால், ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்துவழங்கும், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு குறித்து , தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லமாட்டேன். அரசு தான் இது பற்றி சொல்லும். இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...