இராணுவம் நவீனமயமாக முன்னுரிமை தருவோம்

 பாதுகாப்பு படைகள் நவீன மயத்துக்கு மோடி அரசு முன்னுரிமை அளிக்கும்; நிதி ஒதுக்கீடு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது; . ‘

தொடர்ந்து அருண்ஜெட்லியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கொள்முதல்களை விரைவு படுத்துகிற வகையில், பாதுகாப்பு படைகளுக்கான கொள்முதல் நடைமுறைகள் முழுமையாக மறு ஆய்வு செய்யப்படுமா?

பதில்:- முழுமையான மறு ஆய்வு என்ற வார்த்தைகளை நான் உபயோகிக்க மாட்டேன். ஆனால், தற்போதைய நடைமுறைகளின் படி கூட, நடைமுறைகளை விரைவு படுத்துவது என்பது சாத்தியமான ஒன்றுதான். ஒவ்வொரு பைலும் எண்ணற்றமுறைகள் மேலேயும், கீழேயும் சென்று கொண்டிருக்க வேண்டியதில்லை.

கேள்வி:- முந்தைய அரசில் பல்வேறு கொள்முதல்கள் இறுதிக் கட்டத்தில் இருந்தன. உதாரணத்துக்கு, விமானப்படைக்கான தாக்குதல் விமானங்கள் கொள்முதல் முந்தைய அரசால் திட்டமிடப்பட்டு, நிறைவேற்றப் படாமல் உள்ளதே?

பதில்:- முந்தைய அரசுக்கும், தற்போதைய அரசுக்கும் இடையே மோதல் போக்காக நான் இதை கருதமாட்டேன். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை. இதை நான் வலியுறுத்துவேன்.

பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு?

கேள்வி:- நீங்கள் ராணுவத் துறை, நிதித் துறை இரண்டுக்கும் மந்திரி. உங்களிடம் இருந்து பாதுகாப்பு படையினரின் நம்பிக்கை என்னவாக இருக்கிறது?

பதில்:- நீங்கள் அதற்கு ஜூலை 10ந் தேதிவரை (பட்ஜெட் தாக்கலாகும் தேதி) காத்திருக்க வேண்டும்.

கேள்வி:- பாதுகாப்பு துறைக்கு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?

பதில்:- சதவீத கணக்கிற்குள் நாம் செல்லவேண்டாமே. முழுமையான அளவை பார்ப்போம். பொருளாதாரத்தின் அடிப்படை விரிவாகிறது. குறைவான சதவீதம் கூட பெருந்தொகையாக வரும். எவ்வளவுதொகை தேவையோ, அவற்றை கிடைக்க பெருமுயற்சி செய்வோம்.

கேள்வி:- ஆயுதங்கள் பற்றாக் குறை குறித்து ராணுவ தலைமை தளபதியாக இருந்த விகே.சிங், முந்தைய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தாரே?

பதில்:- நாட்டின் பாதுகாப்புக்காக பாதுகாப்புபடைகள் தயார் நிலையில் உள்ளன. அவர்களது தேவை, அரசு கஜானாவிலிருந்து கவனிக்கப்படும்.

கேள்வி:- வி.கே.சிங்கிற்கும், புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிற தல்பீர்சிங் சுஹாக்கிற்கும் இடையேயான விவகாரம் குறித்து?

பதில்:- இதில் அரசின் நிலைப்பாடு, பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. (தல்பீர்சிங் சுஹாக் நியமனத்தில் அரசு உறுதி).

கேள்வி:- கடற்படை கப்பல்கள் விபத்துக்குள்ளானது பற்றி கடற்படை தளபதிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டதா?

பதில்:- இல்லை. இந்த விஷயத்தில் என்னிடம் கடற்படை முழுமையான தகவல்கள் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர்கள் உள்விசாரணை நடத்துகிறார்கள். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அவர்கள் எடுக்கின்றனர்.

கேள்வி:- ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ராணுவத்தை இந்தியா அனுப்புமா?

பதில்:- நான் யூகம் கூறமாட்டேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...