ஷேக்ஹசீனாவுக்கு இந்தியா வரும்படி மோடி அழைப்பு

 வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசீனாவை இந்தியாவிற்கு வரும்படி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

வங்காள தேசத்திற்கு சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் ஹசீனாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, இந்தியபிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்தை ஹசீனாவிடம் தெரிவித்தார்.

மேலும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மகமூத் அலியையும் சந்தித்தார் சுஷ்மா.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மகமூத் அலி, இரு நாடுகளுக்கும் இடையே விசா நடை முறைகளை இந்தியா எளிமைப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். மேலும், வங்காளதேச குடிமக்களில் 13வயதிற்கு கீழுள்ளவர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு மல்டிபிள் என்ட்ரி விசாக்களை வழங்கவும் இந்தியா சம்மதித்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்த மாதம் வெளியுறவுத் துறை மந்திரியாக பதவியேற்றபிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக வங்காள தேசத்திற்கு சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...