40 ஊழியர்களை விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய அமைச்சர்

 டெல்லியில் உள்ள செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சக அலுவலகத்துக்கு தாமதமாக வேலைக்குவந்த 40 ஊழியர்களை, சாதாரண விடுப்பில் வீட்டுக்கு திரும்பிபோகுமாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் நேற்று காலை 9 மணிக்கு டெல்லியில் உள்ள தனது அமைச்சக அலுவலகத்துக்கு திடீரெனவந்துள்ளார். 9.30 மணிக்கு அமைச்சகத்தை ஜாவேத்கர் சுற்றி பார்த்தபோது பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிக்குவரவில்லை. சில செக்ஷன்கள் வெறிச்சோடி கிடந்தன.

இந்நிலையில், காலை 9 மணிக்கு வரவேண்டிய ஊழியர்கள் 10 மணிக்கு அலுவலகம்வந்தனர். ஒருசிலர் அப்போதும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் தாமதமாகவருபவர்கள் அனைவரையும் தன்னை வந்து பார்க்குமாறு உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தாமதமாக பணிக்குவந்த 40 பேர், அமைச்சரை பார்ப்பதற்காக அவரது அறைக்குவெளியே வரிசையாக நின்றனர். அவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து சாதாரணவிடுப்பில் வீட்டுக்கு செல்லுமாறு ஜாவேத்கர் உத்தரவிட்டார்.

இனிமேலும் தாமதமாக வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்து அனுப்பினார். இதைத் தொடர்ந்து அனைத்து அதிகாரிகளுக்கும் ஒருசுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு அலுவலகம் வரவேண்டும். 5.30 மணிவரை இருக்கையில் அமர்ந்து பணிசெய்ய வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட பிரிவு கண்காணிப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஒரேநேரத்தில் 40 பணியாளர்களை விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...