வளர்ச்சிதான் எங்களின் இலக்கு

 வளர்ச்சிதான் எங்களின் இலக்கு, நிதி பற்றாக்குறையை 4.1 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம் , இது முடிவல்ல.பயணத்தின் ஆரம்பம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார் .

மத்திய பொதுபட்ஜெட் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது;

வருமானத்தை அதிகரிக்க செய்வதுடன் செலவையும் குறைக்க திட்டமிட்டுள்ளோம்; எனது இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு புதுபாதையை ஏற்படுத்தித் தரும் என நம்புகிறேன் நான் வகுக்கப்பட்ட திட்டங்களின்படி நடக்க நினைக்கிறேன்; மற்றவர்கள் டிவி.,க்களில் பேட்டிகொடுக்க மட்டுமே நினைக்கிறார்கள்; ஆனால் நாங்கள் செயல்பட நினைக்கிறோம்; இது எனக்கும், அவர்களுக்கும் இடையேயான வித்தியாசம்.

நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இல்லாததால் அதனால் ஏற்படும் பிரச்னைகளை சந்தித்துவருகிறோம்; பொருளாதாரத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால் அவர்கள் இந்தியாவில் முதலீடுசெய்ய தயாராக இல்லை; இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகின்றனர்; இதனால் மக்களின் வரித்திட்டம் மோசமாக உள்ளது; உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்து, விலைவாசி உயர்ந்துள்ளது; மக்களின் வரிப் பணத்தால் கிடைக்கும் தொகையை கொண்டு பொருளாதாரத்தை சீராக்கமுடியாது; இதனை சரி செய்வதற்காகவே 45 நாட்களாக மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தபட்ஜெட்டை தயாரித்துள்ளேன்.

இது எனதுபயணத்தின் ஆரம்பம்தான்; இந்த பயணத்தை துவங்குவதற்கு முன்னரே 7 முதல் 8 மிகப் பெரிய விஷயங்களில் என்னை நான் தெளிவுபடுத்திக் கொண்டுள்ளேன்; முந்தைய அரசு செய்யாமல் விட்டுச் சென்ற நலத்திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறேன்; அவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நினைக்காமல், எளிமையாக அதனை சமாளிக்க நினைத்து காலம் ஓட்டியதால்தான் பல விவகாரங்கள் சிக்கல் நிறைந்ததாக ஆகி உள்ளது; லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கட்சியாக வெற்றிபெற்றதும் உலக முதலீட்டாளர்கள் 2வது முறையாக நமக்கு வாய்ந்த கொடுத்திருப்பது எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது; நான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கடைபிடித்தால், இந்தியபொருளாதாரம் புதிய பாதையில் செல்ல வழிவகுக்கும்; அரசுக்கு ஒத்துழைப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டியது மக்கள்தான்; வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் சுமையை குறைப்பதற்கே புதிய வரி ஏதும் விதிக்கவில்லை.

காங்கிரசின் திட்டங்களை நான் காப்பி அடிக்கவில்லை; இது முற்றிலும் வேறுபட்டது; தனியார் துறை முதலீடுகள் குறித்த அறிப்பபை நான் வெளியிட்டதும் சென்செக்சில் உயர்வு ஏற்பட்டது; 2018ம் ஆண்டுக்குள் மிகப் பெரிய நிதித்துறை மாற்றத்தை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்; வங்கிகளின் கிளைகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்; இதில் அரசின் பங்களிப்பு 80 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைத்துள்ளோம்.

* செலவுகளைக் குறைக்க நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? செலவை கட்டுப்படுத்தும் திட்டங்கள் எதையும் வெளியிடாமல் நீங்கள் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதிலேயே கவனம் செலுத்தி விட்டு செலவை கண்காணிக்க ஆணையம் அமைத்துள்ளது எவ்வாறு?

எதார்த்தத்தை உணர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது; கடந்த 66-67 ஆண்டுகளில் மானியம் குறித்த கேள்விகளுக்கு இந்தியாவில் விடை காண முடியவில்லை; அப்படி இருக்கையில் 45 நாட்களில் என்னால் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்; மானியம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை கண்காணிக்கவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது; மானியங்களால் ஏற்படும் செலவு அதிகரித்துள்ளது; இதனை கருத்தில் கொண்டே எண்ணெய், டீசல் ஆகியவற்றை சந்தை மயமாக்க திட்டமிட்டுள்ளோம்.

* சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணை விலை பற்றி…

ஆதார் திட்டத்தின் கீழ் இவற்றை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம்; பிரதமர் கடந்த வாரம் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்திலும் இது பற்றி விவாதிக்கப்பட்டது.

* 2015 ஏப்ரல் மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி மாற்றி அமைக்கப்படுமா?

அதற்கு முக்கியத்துவம் அளித்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

* இது சீரமைப்பிற்கான உங்கள் பயணத்தின் ஆரம்பம் என தெரிவித்துள்ளீர்கள். அப்படியானால் உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை அடுத்த 6 அல்லது 8 மாதங்களில் ஏற்படுத்துவீர்களா?

அது குறித்து நானும், பிரதமரும் ஆலோசித்து வருகிறோம்; வளர்ச்சிக்கான பாதையில் நீங்கள் நடந்தால் பாதை தெளிவாக உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...