மகாத்மாகாந்தி கொலை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பாகவே உள்ளன

 பிரதமர் மோடியின் உத்தரவுப்படி உள்த்துறையில் 11 ஆயிரம் ஆவணங்கள் அழிக்கப்பட்டன. இவற்றில் ஒன்றுகூட மகாத்மாகாந்தி கொலை சம்பந்தப்பட்டது கிடையாது’ என மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் பாதுகாத்துவைக்கப்பட்டு இருந்த ஒன்றரை லட்சம் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றில் மகாத்மா காந்தி படுªகொலை சம்பந்தப்பட்டவையும் அடங்கும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி. ராஜீவ், 2 தினங்களுக்கு முன் குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான ஆவணங்கள் குவித்துவைக்கப்பட்டு இருந்தன. பணியிடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், அலுவலகங்களில் பணிகலாசாரத்தை ஒழுங்குப்படுத்தவும் தேவையற்ற ஆவணங்களை அழிக்கும்படி பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டார்.

அதன் படி, ஆவண பாதுகாப்பு விதி முறைகளுக்கு உட்பட்டு, ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் தேவையற்ற ஆவணங்கள் என்று முடிவுசெய்யப்பட்ட 11 ஆயிரம் ஆவணங்கள், கடந்த 5ம்தேதி முதல் 8ம்தேதி வரை அழிக்கப்பட்டன.இவற்றில் ஒன்றுகூட, மகாத்மா காந்தி கொலை சம்பந்தப்பட்டவை இல்லை . அதோடு, ராஜேந்திரபிரசாத், லால்பகதூர் சாஸ்திரி மற்றும் லார்ட் மவுன்ட்பேட்டன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் அழிக்கப்படவில்லை. இந்தவிஷயத்தில் எம்.பி. தவறான தகவலை கொடுத்துள்ளார். மகாத்மாகாந்தி சம்பந்தப்பட்ட 52 ஆவணங்கள், 67 ஆதாரபொருட்கள், 11,186 ஆவண தாள்கள் போன்றவை தேசிய ஆவணபாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பாக உள்ளன. என்று அறிக்கையில் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...