5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்

 உத்தரபிரதேசம், குஜராத், மேற்குவங்காளம் உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

கவர்னர்கள் பதவி விலகல் மற்றும் இடமாற்றம் காரணமாக காலியாகஉள்ள 5 மாநிலங்களுக்கு நேற்று புதியகவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி, உத்தரபிரதேச மாநிலகவர்னராக ராம்நாயக் நியமிக்கப்பட்டார். அங்கு கவர்னராக இருந்த பிஎல்.ஜோஷி ராஜினாமாசெய்ததால், காலியாக இருந்த அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு வயது 80. வாஜ்பாய் அரசில், பெட்ரோலியத் துறை மந்திரியாக இருந்தவர் ராம்நாயக். ஒரே அரசில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பெட்ரோலிய இலாகாவை வகித்த ஒரேநபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

3 தடவை எமபி.யாக இருந்துள்ளார். . நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கடந்த ஆண்டே அவர் அறிவித்துவிட்டார் .

எம்.கே.நாராயணன் பதவி விலகியதால், காலியாக உள்ள மேற்குவங்காள மாநில கவர்னர் பதவிக்கு கேசரிநாத் திரிபாதி நியமிக்கப் பட்டுள்ளார். வருகிற நவம்பர்மாதம், அவருக்கு 80 வயது ஆகிறது. அவர் உத்தரபிரதேச முன்னாள் சபாநாயகர் ஆவார்.

மேலும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். சிலபுத்தகங்களை எழுதி உள்ளார். மாணவபருவத்தில் காஷ்மீர் பிரச்சினைக்காக போராடி சிறைசென்றுள்ளார். 5 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

கமலாபேனிவால் மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால், காலியாக உள்ள குஜராத் கவர்னர்பதவிக்கு ஓம்பிரகாஷ் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். 78 வயதான இவர், டெல்லிமாநில பா.ஜ.க முன்னாள் தலைவர் ஆவார்.

மாணவபருவத்தில் இருந்தே பா.ஜ.க.,வுடன் தொடர்புடையவர். அதன் மாணவர் பிரிவு தலைவராகவும், டெல்லி பல்கலைக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கதலைவராகவும் இருந்துள்ளார். 1994 முதல் 2000-ம் ஆண்டுவரை, டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருந்துள்ளார்.

சேகர்தத் பதவி விலகியதால், காலியாக உள்ள சத்தீஷ்கார் மாநிலகவர்னர் பதவிக்கு பல்ராம் தாஸ் தாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். 87 வயதான இவர், ஜன சங்கத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார்.

1969-ம் ஆண்டு, பஞ்சாப்மாநில துணை முதல்மந்திரியாக இருந்தார். பிறகு, பிரகாஷ் சிங் பாதல் மந்திரிசபையில் கேபினட் மந்திரியாக பதவி வகித்தார். 6 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

நாகாலாந்து மாநில கவர்னர்பதவிக்கு பத்மநாபா பாலகிருஷ்ண ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பா.ஜ.க.,வின் வட கிழக்கு பிராந்திய பணிக்குழுவின் உறுப்பினர் ஆவார். பா.ஜ.க.,வின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அமைப்பின் துணை அமைப்பாளராகவும் உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...