‘தமிழகத்தில் செயல்படுத்தப்படாத திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும்’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகம் தன் பெருமையை தொலைத்து, கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும், கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழக குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.
நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்து, ‘சமக்ர சிக் ஷா’வின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உறுதி அளித்தது.
இந்த உறுதிமொழியை, ஸ்டாலின் அரசு நிறைவேற்றவில்லை. செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என எதிர்பார்க்கிறீர்கள்.
சமர சிக் ஷா திட்டத்தின் கீழ் பல மாநிலங்களுக்கு, இன்னும் 2024 – 25ம் ஆண்டுக்கான நிதி விடுக்கப்படவில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப முதல்வருக்கு வெட்கமாக இல்லையா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |