நதிகள் இணைப்புதொடர்பாக, மூன்று திட்டங்கள்

 ‘நதிகள் இணைப்புதொடர்பாக, மூன்று திட்டங்களை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இருப்பினும் , சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒப்புதல் தந்தால் மட்டுமே, இந்த நதிகள் இணைப்புத்திட்டம் மேற்கொள்ளப்படும்,” என்று , மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, தெரிவித்துள்ளார்.

நதிகள் இணைப்பு தொடர்பாக, நேற்று லோக் சபாவில் பேசிய, மத்திய நீர்வளத் துறை அமைச்சர், உமாபாரதி கூறியதாவது: நதிகள் இணைப்பு தொடர்பாக, மூன்றுதிட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கென் – பெட்வா நதிகள், தாமன் கங்கா – பிஞ்சால் நதிகள் மற்றும் பார்தாவி – நர்மதா நதிகள் இணைக்கப்படும். இந்த நதிகள் இணைப்புதொடர்பான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியில், தேசிய நீர்மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டது.

மூன்று திட்டங்களில், கென் – பெட்வா, தாமன்கங்கா – பிஞ்சால் நதிகள் இணைப்பு தொடர்பான திட்டஅறிக்கைகள், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒப்புதல் தந்தால் மட்டுமே, இந்ததிட்டம் மேற்கொள்ளப்படும். மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், நதிகள் இணைப்புபணியை மேற்கொள்ள முடியாது. இந்த மூன்று நதிகள் இணைப்பால், 8.64 கோடி ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். 34 ஆயிரம் மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதுதவிர, குடிதண்ணீர் பிரச்னை தீரும்; மீன்வளம் அதிகரிக்கும். பல பகுதிகளில் உள்ள தண்ணீரின் உப்புத் தன்மை குறைவதோடு, சுற்றுச் சூழல் மாசுபடுவதும் கட்டுப்படும் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...