கட்சிக்காக உழைத்தால் பலன் நிச்சயம்

 தமிழகத்தில் 2016ல் நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும்' என்று தமிழக பாஜக புதிய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜனுக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதன் பின்னர், தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; :தமிழக பாஜக தலைவராக என்னை தேர்ந்தெடுத்த கட்சிதலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த தலைவர்கள், தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

கட்சிக்காக உழைத்தால் உண்மையான பலன்கிடைக்கும் என்பதற்கு உதாரணம் இந்த தலைவர் பதவி. ஒரு பெண் தலைவராக நிர்வகிப்பதை பெருமையாக நினைக்கிறேன். அரசியலில் பெண்கள் மிகப்பெரிய அங்கீகாரம் பெற உழைப்பேன்.மூத்த தலைவர்கள் வழிகாட்டுதலின்படி, தொண்டர்களின் ஒத்துழைப்போடு, தமிழக மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்த ஒவ்வொரு நிமிடமும் பணிசெய்வேன். 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய சக்தியாக பாஜக உருவெடுத்து மக்களுக்கு சேவைசெய்யும்.

2016ல் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை பாஜக ஏற்படுத்தும். மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...