வாரணாசியை கலாச்சார நகரமாக்க ஒப்பந்தங்கள்

 ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமரை அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபே சந்தித்துப் பேசினார்.அப்போது இந்திய நகரங் களை 'ஸ்மார்ட்' நகரங்களாக மாற்றுவது குறித்து இரண்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் முதல் கட்டமாக வாரணாசியை கலாச்சார நகரமாக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஐந்து நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றார். கன்சாய்விமான நிலையத்தில் தரையிறங்கிய அவருக்கு அந்த நாட்டு அரசு சார்பில் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வெளிநாட்டுத் தலைவர்களை டோக்கியோவில் சந்திப்பது தான் வழக்கம். பிரதமர் மோடிக்காக அவர் டோக்கியோவில் இருந்து 500 கிமீ. தொலைவில் உள்ள கியோட்டோவுக்கு வந்தார்.

அங்கு நகரமேயரின் வீட்டில் மோடியும் ஷின்சோ அபேவும் சந்தித்துப்பேசினர். மரபுகளை மீறி இந்தியப்பிரதமர் மோடியை ஷின்சோ அபே சந்தித்து பேசியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

கியோட்டோவை போன்று உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியையும் கலாச்சார அம்சம் ஏதும் மாறாமல் ஸ்மார்ட் நகரமாக மாற்ற இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கியோட்டோ மேயர் டைசாகு கடோகாவாவும் ஜப்பானுக்கான இந்தியத்தூதர் தீபா வாத்வாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் பின்னர் மோடிக்கு ஷின்சோ அபே சிறப்பு விருந்து அளித்தார்.

அப்போது சுவாமி விவேகானந்தரின் புத்தகங்கள், பகவத் கீதை ஆகியவற்றை ஷின்சோ அபேவுக்கு மோடி பரிசாக வழங்கினார்.

கியோட்டோ நகரில் ஞாயிற்றுக் கிழமையும் தங்கியிருந்த மோடி அங்குள்ள பல்வேறு புராதன இடங்கள், கோயில்களைப் பார்வையிட்டார் .

எட்டாம் நூற்றா ண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயுடன் சுமார் அரைமணி நேரம் சுற்றிப்பார்த்த மோடிக்கு, அந்த ஆலயத்தின் புராதாண சிறப்புகளை பற்றி ஆலயத்தின் தலைமை பிக்‌ஷு விளக்கிக்கூறினார்.

யுனெஸ் கோவின் புராதாண சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த டோஜி ஆலயம் 5 அடுக்குகளுடன் முழுக்க மரத்தினால் உருவாக்கப்பட்டது. ஜப்பானிலேயே மிக உயரமான 57 மீட்டர் உயர பக்கோடாவை கொண்டது( கூம்புவடிவ கோபுரம்) என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இந்த டோஜி ஆலயத்துக்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியும், இந்த ஆலயத் துக்கு பெருமையும் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்று ஆலயத்தின் தலைமை பிக்‌ஷு யாசு நாகாமோரி (83) தெரிவித்தார்.

அப்போது, அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட பிரதமர், 'நான் மோடி- நீங்கள் மோரி..?' என்று வேடிக்கையாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, அவரது நகைச்சுவை யுணர்வை ரசித்த ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட உடனிருந்த அனைவரும் தம்மை மறந்து சிரித்து மகிழ்ந்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...