வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் இலவச மொபைல்போன் சேவை

 வெள்ள பாதிப்புக் குள்ளான காஷ்மீரில், தொலைத் தொடர்பு சேவையை மீண்டும் துவக்க, மத்திய அரசு மும்முரம் காட்டிவருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் 100 நாட்கள் சாதனைகுறித்து, டில்லியில் நிருபர்களிடம் துறை அமைச்சர் ரவி சங்கர்பிரசாத் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் முழு அளவில் துவக்க மத்திய அரசு மும்முரம்காட்டி வருகிறது. மொத்தமுள்ள 12,306 மொபைல் போன் டவர்களில் 6811 டவர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் 1208 டவர்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் இலவச மொபைல்போன் சேவையை பிஎஸ்என்எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவார காலத்திற்கு இந்தசேவை அமலில் இருக்கும். இதேபோல், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் இலவசமாக பேசிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளன.

அமைச்சகத்தின் சார்பில் இ கிரீட்டிங் முறை விரைவில் அமல்படுத்தப்படும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மூன்று ஐ.டி.,க்களில் (இந்தியன் டேலண்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் இந்தியா டுமாரோ) கவனம் செலுத்தப்படும். நாடுமுழுவதும் தொலைக் காட்சி சேவை விரிவுபடுத்தப்பட்டதை போன்று, பிராட் பேண்டு சேவையும் விரிவுபடுத்தப்படும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் டிராய் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படும். சைபர் குற்றங்களை தடுக்க தேசியசைபர் ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்படும். நீதித் துறையின் சுதந்திரம் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரையில் புனிதமானது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...