வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் இலவச மொபைல்போன் சேவை

 வெள்ள பாதிப்புக் குள்ளான காஷ்மீரில், தொலைத் தொடர்பு சேவையை மீண்டும் துவக்க, மத்திய அரசு மும்முரம் காட்டிவருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் 100 நாட்கள் சாதனைகுறித்து, டில்லியில் நிருபர்களிடம் துறை அமைச்சர் ரவி சங்கர்பிரசாத் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் முழு அளவில் துவக்க மத்திய அரசு மும்முரம்காட்டி வருகிறது. மொத்தமுள்ள 12,306 மொபைல் போன் டவர்களில் 6811 டவர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் 1208 டவர்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் இலவச மொபைல்போன் சேவையை பிஎஸ்என்எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவார காலத்திற்கு இந்தசேவை அமலில் இருக்கும். இதேபோல், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் இலவசமாக பேசிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளன.

அமைச்சகத்தின் சார்பில் இ கிரீட்டிங் முறை விரைவில் அமல்படுத்தப்படும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மூன்று ஐ.டி.,க்களில் (இந்தியன் டேலண்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் இந்தியா டுமாரோ) கவனம் செலுத்தப்படும். நாடுமுழுவதும் தொலைக் காட்சி சேவை விரிவுபடுத்தப்பட்டதை போன்று, பிராட் பேண்டு சேவையும் விரிவுபடுத்தப்படும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் டிராய் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படும். சைபர் குற்றங்களை தடுக்க தேசியசைபர் ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்படும். நீதித் துறையின் சுதந்திரம் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரையில் புனிதமானது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...