தமிழகத்தில் 5 நாட்கள் காஷ்மீர் வெள்ளநிவாரண நிதி வசூல்

 நரேந்திர மோடி பிறந்த நாளான இன்று முதல், தமிழகத்தில் 5 நாட்கள் காஷ்மீர் வெள்ளநிவாரண நிதி வசூல் செய்யப்படும் என்று பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து, மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகளாவிய அளவில் மக்கள்மனதில் நீங்கா இடம்பெற்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி சீரிய தலைமையில், பாரதத்தில் நல்லாட்சி மலர்ந்து மணம்வீசிக் கொண்டுள்ளது. 17-9-2014 இன்று அவரது பிறந்த நாளை சீரும் சிறப்புமாகக் கொண்டாட சிறப்பான முன்னேற்பாடுகளை தமிழக பா.ஜ.க.வினர் உற்சாகமுடன் செய்து வந்தனர்.

ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கைபேரிடர் (பெரு வெள்ளம்) காரணமாக, பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும் மக்களின் துயர்துடைக்க எண்ணிய மோடி, ''பாஜக.,வினர் யாரும் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். அதேசமயத்தில் காஷ்மீர் மக்களின் துயர்துடைக்க, உதவிக்கரம் நீட்ட வெள்ள நிவாரண நிதி வசூலிக்கவேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழக பா.ஜ.க.வினர், மோடியின் பிறந்த நாளை மிக எளிமையாகக் கொண்டாடிவிட்டு, காஷ்மீர்மக்களின் துயரத்தை போக்கும் வகையில், தமிழகம் எங்கும் வெள்ள நிவாரண நிதி வசூல்செய்யும் பணியில் ஈடுபட்டு, அவரது பிறந்த நாளான 17-ந் தேதி (இன்று) முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மக்களை சந்திக்க உள்ளனர் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாராது வந்த மாமணி, பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக பா.ஜ.க. சார்பில் என் நெஞ்சார்ந்த, உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை காணிக்கையாக்குகிறேன். அவர் காட்டும் வழியில், தளராது நடைபோட்டு நாட்டு மக்களுக்கு சேவைசெய்ய உறுதி எடுக்குமாறு எனது சகோதர, சகோதரிகளுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...