தேசியமகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக லலிதா குமார மங்கலம் நியமனம்

 தேசியமகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த லலிதா குமார மங்கலம் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார் .

தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேனகா காந்தி கூறியதாவது:

சமூகத்தில் பெண்களுக்குக்காக குரல்கொடுத்து வருபவரும், தலைமை பண்புகள் நிறைந்தவருமான பா.ஜ.க.,வைச் சேர்ந்த லலிதா குமார மங்கலத்தை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தேர்வுசெய்யலாம் என்று பிரதமரும், நானும் விரும்பினோம். அந்தவகையில், இது அரசின் முடிவாகும். பெண்களின் தேவைகள், உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் லலிதா குமார மங்கலம் செயல்படுவார் என்று முழுமையாக நம்புகிறேன்.

பொது இடங்களிலும், பணி இடத்திலும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன் கொடுமைகள் நடத்தப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவருக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பது, நோட்டீஸ் அனுப்புவது போன்ற அதிகாரங்கள் தேசியமகளிர் ஆணையத்துக்கு கிடைக்க வேண்டும். மத்திய அமைச்சர் என்ற முறையில் மகளிர் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம்கேட்டு வலியுறுத்த எனது முயற்சி தொடரும்' என்றார் மேனகா காந்தி.

இதுகுறித்து லலிதா குமாரமங்கலம் கூறியதாவது: "தேசிய மகளிர் ஆணைய தலைவராக என்னை நியமனம்செய்து மத்திய அரசு பிறப்பித்த ஆணையை ஏற்றுக்கொண்டேன். தில்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோரைச் சந்திக்கவுள்ளேன்.

அவர்களின் அறிவுரைப்படி கட்சிப்பதவியில் நீடித்துக் கொண்டே ஆணையத்தின் தலைவர் பதவியை தொடருவதா? அல்லது கட்சி பதவியை ராஜிநாமா செய்வதா? என்று முடிவெடுப்பேன்' என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...