மத்திய தகவல் ஆணையத்தின் உயர்மட்ட ஆய்வு கூட்டத்திற்கு ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்

மத்திய தகவல் ஆணையத்தின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  தலைமை  வகித்தார்.

கூட்டத்தில் பேசிய அவர், தகவல் அறியும் உரிமை மனுக்கள் (ஆர்டிஐ) தொடர்பான மேல்முறையீடுகள் கிட்டத்தட்ட 100 சதவீதம் தீர்க்கப்படுவதாக கூறினார். நிலுவையில் உள்ள மனுக்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

தகவல் அறியும் உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களின் நிலுவைஅளவு, 2019-20-ம் ஆண்டில் 35718 என்ற அளவில் இருந்தது எனவும், 2021-22-ம் ஆண்டில் அது 29213 என கணிசமாகக் குறைந்தது என்றும் அவர் கூறினார். 2023-24-ம் ஆண்டில் 23087 மேல்முறையீடுகளாகவும், 2024-25-ம் ஆண்டில் 22666 மேல்முறையீடுகளாகவும் அது மேலும் குறைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தகவல் ஆணையத்தின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பின் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதிலும், மக்களுக்கு தகவல்களை வழங்குவதை எளிதாக்குவதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அமைச்சர் பாராட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆளுகைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...