நீர் வளங்களை பாதுகாப்பதில் குஜராத் முன்னோடி

 நீர் வளங்களை பாதுகாப்பதில் குஜராத் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று மத்திய அமைச்சர் உமா பாரதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி குஜராத்துக்கு சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டில் உள்ள மாநிலங்களிலேயே குஜராத் தான் நீர் வளத்தை பாதுகாப்பதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குஜராத்மாடலை பின்பற்றி நாடுமுழுவதும் உள்ள நீர் வளங்களை பாதுகாக்க அடுத்த ஆண்டு திட்டம் வகுக்கப்பட உள்ளது. குஜராத்தில் நதிகளை பாதுகாத்து அவற்றின்மூலம் இயற்கை வளங்களை பயன் படுத்தி வரும் குஜராத் அரசுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன். 2015-16ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான நீர்வளபாதுகாப்பு திட்டத்தை எனது அமைச்சகம் தொடங்க உள்ளது. அதேபோல், பருவ கால மழை நீரையும் நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இதற்கும் குஜராத் வழி காட்டியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.சீன பிரதமர் இங்குவந்திருந்த போது சபர் மதி நதிக்கரையில் சிறிது தூரம் உலவினார். ஆனால் இதுபோல் நம்மால் கங்கை நதிக் கரையில் நடக்க இயலாது. யமுனை நதியும் அதே நிலையில்தான் உள்ளது. இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்லும் பிரதமர், கங்கையையும் சுத்தமாக்குவார். அவரது ஆட்சியின்போது குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்வள ஆதாரபாதுகாப்பு திட்டங்கள், நாட்டிற்கு வழி காட்டியாக அமையும்.இவ்வாறு உமாபாரதி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...