மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜக-சிவசேனை, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய பிரதான கூட்டணிகள் முறிந்ததால், இந்த தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையொட்டி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவாண், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்களின் வேட்புமனுக்களை அன்றைய தினம் தாக்கல் செய்தனர்.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக சுமார் 7,401 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக, நாந்தேட் தொகுதியிலிருந்து 91 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாஜக 257 தொகுதிகளிலும் . மீதமுள்ள 31 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியினரும், காங்கிரஸ் 288 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 286 தொகுதிகளிலும், சிவசேனை 286 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.