ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிதி திரட்டிய 16 வயது சிறுமிக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி

 ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்வகையில் நிதி திரட்டிய 16 வயது சிறுமிக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

குவைத்தில் வசித்து வரும் 16வயது சிறுமி துவ்வுரி ரோகினிபிரத்யுஷா. பாரதிய வித்யாபவன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் இவர் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரியும் நோக்கத்தில் குவைத்தில் வசித்துவரும் இந்தியர்களை சந்தித்து அவர்களிடம் ரூ. 2.15 லட்சம் நிதி திரட்டி அதனை குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். குவைத்திலிருந்து இத்தொகை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது.

துவ்வுரியின் இச்செயலை பாராட்டி நன்றிதெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறைகொண்டு செயல்பட்ட சிறுமியின் தலைமை மற்றும் நிர்வாக திறன்களை பாராட்டுவதுடன், அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...