அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு

 இந்தியாவின் குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தகவல் வெளியிட்ட மோடி, 'இந்த (2015) குடியரசு தினவிழாவில் ஒரு நண்பரை பங்கேற்க செய்யவுள்ளோம். இந்தவிழாவில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்பதன் மூலம் இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபராக ஒபாமா விளங்குவார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் வெளியான சிலமணி நேரங்களுக்குள் மோடியின் அழைப்பை ஒபாமா ஏற்று கொண்டுள்ளதாகவும், 26-1-2015 அன்று டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்பார் என்றும் அமெரிக்க அதிபரின் ஊடகத் துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும் இந்திய அதிகாரிகளை சந்திக்கும் அதிபர் ஒபாமா, இந்திய-அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது ,விரிவுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வார் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...