மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதை தடுக்க நடுக்கடலில் சிக்னல்

 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க நடுக் கடலில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்கமத்தின் மாநாடு சென்னை அண்ணா பல்கலை கழக வளாகத்தில் நடைபெற்றது. 2 நாள் மாநாட்டை தொடங்கிவைத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விழாவிற்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு மிகவும் கவன முடன் கையாண்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காணும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் நடுக் கடலில் எல்லை தாண்டி சென்றுவிடுவதை தடுக்க நடுக்கடலில் சிக்னல் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு வருகிறது.

கருப்புபண விவகாரத்தை பொருத்த வரை முந்தைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திவந்தது. ஆனால் பாரதீய ஜனதா அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கருப்புபணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. விரைவில் அந்த பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் வெளியிடுவதால் பாஜவுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. காங்கிரசுக்குத்தான் பிரச்சினை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...