டைம்’ இதழின் போட்டியில் பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் முதல் இடம்

 இந்த ஆண்டின் சிறந்த மனித ருக்கான 'டைம்' இதழின் போட்டியில் பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் வருடம் வருடம் உலகின் சிறந்தமனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான வாக்கெடுப்பு இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை 9.8 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

அமெரிக்காவின் பெர்குசன் நகரில் கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டுக்கொன்றதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த போராட்டக் காரர்கள் 10.8 சதவீத வாக்குகளுடன் முதலிடம் வகித்தனர்.

இந்நிலையில், மோடி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். வியாழக்கிழமை நிலவரப்படி, பெர்குசன் போராட்டக்காரர்களை பின்னுக்கு தள்ளி 12.8 சதவீத வாக்குகளை பெற்று பிரதமர் முதல் இடத்தில் உள்ளார். பெர்குசன் போராட்டக்காரர்கள் 10.1 சதவீத வாக்குகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல 3-ம் இடத்தில், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடும் ஜோஸ்வா வாங் உள்ளார். அமைதிக்கான நோபல்பரிசை வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா 4-ஆம் இடத்திலும் உள்ளார்.

எபோலா நோய் எதிர்ப்புக்காக போராடிவரும் மருத்துவகுழு 5-வது இடத்திலும் , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 6-ஆம் இடத்திலும் . அமெரிக்க அதிபர் ஒபாமா11-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...