திமுக, அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது

 தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை கருத்தில்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, கட்சித்தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள், வருகிற பிப்ரவரி மாதமோ அல்லது அதற்க்கு பிறகோ தமிழகம் வரவுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

கோவை, ஆர்.எஸ்.புரத்தில் பாஜக சார்பில் உறுப்பினர்சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலுக்குள் பாஜக.,வை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் தனியாக பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் மாதத்திற்குள் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தை பொறுத்த வரை திமுக, அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் நல்லாட்சி அமையவும், நீண்ட காலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் பாஜகவால் மட்டுமே முடியும்.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை மிக முக்கியமானதாக கருதுகிறோம். மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் வரும் பிப்ரவரி அல்லது அதற்குப்பிறகு தமிழகம் வரவுள்ளனர். மத்திய அமைச்சர்களும் வரவுள்ளனர்.

தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் தலைவர்களின் வருகையின் போது அறிவிக்கப்பட இருக்கின்றன. பிரதமர் வருகையின் போது பல்வேறு அரசியல் கட்சிகளில் தீவிரமாக செயல்பட்ட முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள் பிறகு தெரிவிக்கப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...