பா.ஜ.க-வில் தினமும் 25 ஆயிரம் பேர் இணைகின்றனர்.

 தமிழகத்தில் பாஜக-வில் தினமும் 25 ஆயிரம் பேர் இணைவதாகவும், வரும் 1-ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை மேலும் அதிகப்படுத்தப் போவதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

பத்திரிகயாளர்களை தமிழிசை சந்தித்து பேசுகையில், "மத்தியில் ஆளும் பாஜக அரசு கவர்ச்சி அரசியலை நடத்தாமல் கொள்கைபிடிப்போடு அரசியல் நடத்தும் காரணத்தினால் தமிழகத்தில் இருந்து நிறையபேர் எங்கள் கட்சியில் இணைகின்றனர். மதம் சார்ந்த பிரச்சினைகள் மட்டும் அல்லாமல், மனிதம் சார்ந்த பிரச்சினைகளை நாங்கள் முன்னெடுத்து செல்லும் காரணத்தினால் பா.ஜ.க-வில் தமிழகத்தில் இருந்து சராசரியாக தினமும் 25 ஆயிரம் பேர் உறுப்பினராக இணைகிறார்கள். மேலும் வரும் 1-ஆம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி எண்ணிக்கையை அதிகப்படுத்த உள்ளோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. ஈ.வி.எஸ் அவர்கள் தமிழகத்தில் பாஜக. எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். கண்ணாடி அணிந் திருந்தும் அவருக்கு பாஜக. வளர்ந்து கொண்டிருப்பது தெரிய வில்லை போல இருக்கிறது அவரது பேச்சு. காம ராஜரை மறந்து குஷ்புவை மட்டும் வைத்து கட்சியை நடத்தும் நிலையில் தமிழக காங்கிரஸ்கட்சி உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிதான் துண்டுதுண்டாக உடைந்துள்ளது. முதலில் அவர் கட்சியைப் பாதுகாத்துக்கொண்டு பலப்படுத்தி கொள்ளட்டும்.

போக்கு வரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்க்கவேண்டும். மழைகாலம் தொடங்கி விட்டதால் சென்னையில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. எனவே, சாலையை செப்பனிடும் பணியில் மாநகராட்சி ஈடுபடவேண்டும்" என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...