திருவள்ளுவர் குறித்த கட்டுரைப்போட்டியை இம்மாத மத்தியில் ஆன்லைன் மூலம் நடத்துமாறு சி.பி.எஸ்.இ பள்ளிகளை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி டெல்லியில் இதனை தெரிவித்தார். திருவள்ளுவர் தொடர்பாக பாஜக எம்.பி. தருண்விஜய் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்மிருதி இராணி, இந்த கட்டுரை போட்டியின் மூலம், திருவள்ளுவரின் வாழ்க்கைகுறித்தும் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் என்று கூறினார். மேலும் இந்த ஆன்லைன் கட்டுரை போட்டி, பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் நாடுமுழுவதும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருவள்ளுவரின் படைப்புகள் தேசிய கல்வி குழும பாடத்திட்டத்தில் சேர்க்கப் படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்மிருதி இராணி, புதிய கல்வி கொள்கை தொடர்பான விவாதம் தற்போது தொடங்கியுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களின் பெருமிதங் களையும் கொண்டாட வேண்டும் என்பதே அரசின்விருப்பம் என்றும் கூறினார்.
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.