இலங்கை அதிபர்தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வி

 இலங்கை அதிபர்தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வியைத் தழுவியுள்ளார். ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட 49 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேன சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைநோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்.

மைத்ரிபாலவுக்கு 52.2%; ராஜபக்சேவுக்கு 46.5% வாக்குகள் கிடைத்துள்ளன. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதிபராக உள்ள மகிந்த ராஜபக்சேவும் அவரை எதிர்த்து 49 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேனவும் போட்டியிட்டனர்.

இலங்கையில் இது வரை இல்லாத வகையில் 72% வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் பெரியளவில் வன்முறை சம்பவங்கள் நடை பெறவில்லை. பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக தபால் வாக்குகளும் பின்னர் மக்கள் அளித்த வாக்குகளும் எண்ணப்பட்டன. தமிழர்வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மகிந்த ராஜபக்சேவுக்கு மிகமிக குறைவான வாக்குகளே கிடைத்தன.

மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு மிக அதிகளவில் தமிழர்கள் வாக்களித்துள்ளனர். சிங்களர் வாழும் பகுதிகளிலும் கூட ராஜபக்சே தோல்வியை சந்தித்துள்ளார். அங்கும் மைத்ரி பால ஸ்ரீசேனவுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

இதனால் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரி பால ஸ்ரீசேன வெற்றிபெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத்தொடர்ந்து அதிகாரப்பூர்வமான இல்லமான அலரி மாளிகையைவிட்டு மகிந்த ராஜபக்சே இரவோடு இரவாக வெளியேறி விட்டார். தற்போதைய நிலையில் மைத்ரிபாலவுக்கு 52.2% வாக்குகளும் ராஜபக்சேவுக்கு 46.5% வாக்குகளும் கிடைத்துள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...