இலங்கை சென்றார் பிரதமர் மோடி – வரவேற்பு அளித்த அமைச்சர்கள்

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இலங்கை சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆறு அமைச்சர்கள் வந்து வரவேற்றனர்.

தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்வத்ராவை சந்தித்தார். பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட பிரதமர் மோடி, இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார்.

அங்கு அவரை, இலங்கை அமைச்சர்கள் விஜிதா ஹெராத், நலிந்த ஜெயடிசா, அனில் ஜெயந்தா, ராமலிங்கம் சந்திரசேகர், சரோஜா சாவித்ரி பால்ராஜ், கிறிசானந்தா அபேசேனா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொழும்புக்கு வருகைதந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன் எனக்கூறியுள்ளார்.

இந்த பயணத்தின் போது, இந்திய நிதியுதவியடன் அனுராதபுரத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மோடி துவக்கி வைக்க உள்ளார். அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்.

பிரதமர் மோடியை, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் விமான நிலையத்தில் ஒன்று கூடி வரவேற்றனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...