காஸ்மானிய திட்டத்தில் இரண்டே மாதத்தில் 10 கோடிபேர் பிரதமர் பாராட்டு

 காஸ்மானியத்தை வங்கிகள் மூலம் பெறும் திட்டத்தில் 10 கோடிபேர் இணைந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசின் மானியம் உரியபயனாளிக்கு கிடைக்கும் அதேநேரத்தில் கள்ளச் சந்தையின் செயல்பாடுகளும் முடிவுக்கு வரும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், 'காஸ் மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிகள்மூலம் வழங்கும் (பாஹல் யோஜனா) திட்டத்தில் 10 கோடி பேர் இணைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மோடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

சமையல் எரிவாயு தொடர்பான நேரடிமானியத் திட்டத்தில் இதுவரை 10 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சந்தை விலையில் சமையல் எரி வாயுவை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் இரண்டே மாதங்களில் இவ்வளவு பேர் இணைந்ததற்காக அதிகாரிகளுக்கும், பயனாளிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கள்ளச் சந்தையில் எரிவாயு உருளைகள் விற்கப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைப்பதோடு, மக்களை மானியமானது மேலும் திறம்பட சென்றடைவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்துகிறது. தேசத்தை கட்டமைப்பதில் இதன்பங்கு முக்கியமானதாகும்.

உலகிலேயே மிகப் பெரிய நேரடி மானியத்திட்டம் இதுவாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மொத்தமுள்ள 15.3 கோடி சமையல் எரிவாயுஉருளை வாடிக்கையாளர்களில் 65 சதவீதம்பேர் இந்த நேரடி மானிய திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டமானது, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நேரடிமானியத் திட்டங்களை முந்தியுள்ளது. ஏனெனில் அந்நாடுகளில் இத்திட்டத்தின்கீழ் வரும் பயனாளிகளின் எண்ணிக்கை 2.2 கோடிக்கும் அதிகமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், 'காஸ் மானியத்தை பயனாளிக்கு நேரடியாக வழங்கும்திட்டம், 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. பின்னர் ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி காஸ்மானியத்தை உரியவர்களுக்கு அவர்களது வங்கிகணக்கில் டெபாசிட் செய்வதன் மூலம் கள்ளச்சந்தையின் செயல்பாடுகள் தடுக்கப்படுவது மட்டும் அல்லாமல் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசால் சேமிக்கமுடியும்' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...