பெட்ரோல் விலை குறைப்பு இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்..!

பெட்ரோல் மீதான கலால்வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்தியஅரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டருக்கு, தலா 200 ரூபாய் மானியம், பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்குமீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை என பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை பல்வேறுதரப்பினர் வரவேற்றுள்ளனர். இந்த வரவேற்பு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்து மட்டுமில்லாமல் இந்தியாவின் எதிரிநாடாக பார்க்க கூடிய பாகிஸ்தானில் இருந்தும் மத்தியஅரசிற்கு கிடைத்துள்ளது.

மத்திய அரசின் விலைக் குறைப்பு நடவடிக்கைகுறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பதிவில், ‘குவாட் அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும், அமெரிக்காவின் அழுத்தங்களை பொருட் படுத்தாமல், இந்தியா ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது. இதன்மூலம் அந்நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் எரிபொருள் வழங்கமுடிகிறது என தெரிவித்துள்ளார். இதுபோன்ற சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைதான் பாகிஸ்தானில் உருவாக்க தனது அரசு முயற்சிசெய்தது என்று தெரிவித்துள்ளார். தனது அரசுக்கு பாகிஸ்தானின் நலன்தான் முக்கியம் என கூறியவர், ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் அந்நியசக்திக்கு அடிபணிந்து ஆட்சியை கலைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். . இதனால் பாகிஸ்தானில் தற்போது தலையில்லா கோழிபோல் ஆட்சி நடைபெறுகிறது என்றும் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிசெல்வதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...