மோடி சொன்னால் கிணற்றிலும் குதிப்பேன் – அண்ணாமலை

”கிணற்றில் குதி என்று பிரதமர் மோடி சொன்னாலும், கண்ணை மூடிக்கொண்டு செய்வேன்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருக்க வேண்டும். அதில், அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. முதல்வர் பங்கேற்காதது எங்களுக்கு வருத்தம். அடுத்த முறை, தவறை முதல்வர் திருத்திக் கொள்வார் என, எதிர்பார்க்கிறோம்.

முதல்வர் ஊட்டிக்கு சென்றதால், இலங்கையில் பிரதமர் மோடி பேசியது தெரியவில்லை. பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.

இலங்கையில் என்ன பேசப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இவற்றை மறைத்துவிட்டு, சட்டசபையை தவறாக பயன்படுத்தி உள்ளனர். கச்சத்தீவை மீட்க, யாரும் பாடம் எடுக்க வேண்டாம். கட்சித் தலைவர் பதவி இல்லை என்றால், நான் இன்னும் களத்தில் இருந்து போராடுவேன். மாநிலத் தலைவர் பதவி இருக்காது என்பதால், தொண்டனோடு தொண்டனாக இருந்து போராட்டத்தை நடத்துவேன்.

பதவிகள் வரும், போகும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சுறுசுறுப்பாக களத்தில் போராட வேண்டும். தி.மு.க.,வின் ஊழலை, தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுவேன். இதில் எந்த தொய்வும் கிடையாது.

மோடிக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அவர் கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் குதிப்பேன். ஒரு கட்சியை பார்த்தோ, அதன் சித்தாந்தத்தை பார்த்தோ அரசியலுக்கு வரவில்லை.

மோடி சொன்னால், அதை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துவேன். அவரது கட்டுப்பாடுகளை முழுமையாக ஏற்று செயல்படுவேன்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...