சிறிசேனாவின் வருகை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தரும்

 சிறிசேனாவின் வருகை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை அதிபர் சிறிசேனாவின் இந்திய வருகை அங்கு உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள இந்த குறுகியகாலத்துக்கு உள்ளாகவே இந்தியாவுக்கு வந்து இருநாடுகளும் சந்திப்பதே, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தோடு வாழும் வாழ்வுரிமையை பெற்றுத்தரும் என்று உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.

சமீபகாலத்தில் மீனவர்களின் பிரச்சினைகளில் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான நம்பிக்கையும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. படகுகள் எல்லாம் மீட்கப்பட்டு உள்ளன. அதற்கு தொடர்ந்து மத்திய அரசு எடுத்த முயற்சிகள்தான் காரணம்.

தமிழகத்தில் மாறுபட்ட அரசியல்சூழல் நிலவுகிறது. ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலை ஊழலுக்கு எதிரான தேர்தல் என்ற நிலையில் பா.ஜனதா சந்தித்தது.

மாநிலத்தில் எந்த இடைத் தேர்தல் நடந்தாலும் மாநில தேர்தல் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு இணக்கமாக பணி புரிந்து விடுகிறார்கள் என்பதும் மிக வேதனையான விஷயம். எது எப்படி இருந்தாலும் தேர்தலில் நின்று அந்த களத்தைப்பற்றி தெரிந்து கொண்டு எதிரிகள் எத்தனைபலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பதில் மட்டுமல்லாமல் ஒருநல்ல தேர்தலை சந்தித்தோம் என்பதில் பா.ஜ.க மகிழ்ச்சி அடைகிறது.

போர்க் களத்தில் எதிர்த்து நிற்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு எடுத்துச்சென்றதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

முதலில் தேமுதிக.தான் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவதாக இருந்தது. அவர்கள் போட்டியிட வில்லை என்றதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பா.ஜ.க போட்டியிடும் என்று முடிவெடுக்கப்பட்டது.

கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இன்னும் ஒற்றுமையாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்களால் வர இயல வில்லை. இறுதி நாள் பிரசாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் வருவதாக இருந்தது. அந்த கூட்டத்துக்கு அனுமதிபெறுவதில் தாமதம் ஏற்பட்டது போன்ற சில காரணங்களால் அவரால் பிரசாரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

ஊழலுக்கு எதிராக ஒரேகுரலாக செயல்படத் தவறிவிட்டோம் என்பதுதான் இங்கே யதார்த்தம். எனவே வருங்காலத்தில் எதிர்க்கட்சிகள் பிரிந்து இருந்தால் ஆளும்கட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் எந்த வகையிலும் பலம்பெறாமல் போய்விடுமோ? என்ற அச்சம் எல்லா எதிர்க் கட்சிகளுக்கும் இருக்கவேண்டும்.

இதனைத் தான் இந்தத் தேர்தலும் உணர்த்துகிறது. ஊழலுக்கு எதிராக நாம் எப்படி செயல்படப் போகிறோம் என்ற ஆன்ம பரிசோதனையில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...