வட கிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம்கொண்டாடி வருகிறது. இந்தியாவின் அங்கமாக திகழும் அருணாசல பிரதேச எல்லையில் நடைபெறும் ரெயில் மற்றும் பஸ் போக்கு வரத்துக்கான உள் கட்டமைப்பு வசதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
இந்நிலையில் அருணாசல பிரதேச மாநிலம் உருவான தினம் தலைநகர் ஈட்டா நகரில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அவர் பங்கேற்ற ஒருமணி நேரத்தில் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பெய்ஜிங்கில் சீனாவுக்கான இந்தியதூதர் அசோக் காந்தாவை சீன வெளியுறவு துணைமந்திரி லியு ஷென்மின் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தார்.ரிவித்தது.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்தியவெளியுறவு அமைச்சக அதிகாரி கிரன் ரிஜிஜு ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் அருணாசல பிரதேசம் முழுவதும் இந்தியாவின் பகுதி, அங்கு இந்தியபிரதமர் செல்வதை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது.
அவ்வாறு இருக்கும்போது இந்திய பிரதமர் அவரது நாட்டில் உள்ள பகுதிக்கு செல்வதை பிரச்சினை ஆக்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் சீனாவுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் அருணாசல பிரதேசத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் செல்ல இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.