இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் அடுத்த வாரம் சுற்றுப் பயணம்

 இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அடுத்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 10ம் தேதியன்று, தனது சுற்றுப் பயணத்தை அவர் தொடங்குகிறார்.

இலங்கைக்கு 1987ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி சென்றார். அவருக்கு அடுத்ததாக, 25 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆவார்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்க பட்டிருப்பதாவது:

இந்த ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல்வெளிநாட்டு சுற்றுப்பயணமாக செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை ஆகிய 3 நாடுகளில், வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்கிறார்.

தனது பயணத்தின் முதல் கட்டமாக செஷல்ஸ் செல்லும் பிரதமர் , மார்ச் 11ம் தேதியன்று அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலெக்சிஸ் மிச்செல்லுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது அவர், இரு நாடுகளுக்கு இடையே கடற்படை ரீதியிலான உறவை வலுப் படுத்துவது, வளர்ச்சி தொடர்பாக ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து செஷல்ஸ் அதிபருடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதைத் தொடர்ந்து, மோரீஷஸில் 11, 12 ஆகிய இரு தினங்கள் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்கிறார். அங்கு அவர், மோரீஷஸ் பிரதமர் அனிருத் ஜகந்நாத்துடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மோரீஷஸின் தேசிய தின கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்.

பின்னர், இலங்கையில் 13, 14 ஆகிய இரு தினங்களுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கைக்கு வரும் மோடிக்கு, அணிவகுப்பு மரியாதை, துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

அதைத்தொடர்ந்து, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவுடன், பிரதமர் மோடி இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கை நாடாளு மன்றத்தின் சிறப்பு அமர்விலும் மோடி உரையாற்றவுள்ளார். இலங்கை அதிபர் சிறீசேனா, அரசு சார்பில் சிறப்பு விருந்து அளிக்கவுள்ளார்.

இலங்கைக்கு அமைதிப் பணிக்காக வந்து உயிர் நீத்த இந்திய அமைதி காப்புப்படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்துக்கு சென்று மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளார். கொழும்பு அருகே உள்ள மகா போதி சங்கத்துக்கும் அவர் செல்கிறார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதி யுதவியுடன் செயல்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். யாழ்ப் பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள வீடுகளை, பயனாளிகளுக்கு பிரதமர் அளிக்கவுள்ளார். அனுராத புரத்தில் உள்ள ஸ்ரீமகா போதி என அழைக்கப்படும் போதிமரத்தின் கிளையில் இருந்து உருவான மிக பழைமையான புனிதமரத்தையும் அவர் பார்வையிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...