அங்கன் வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும்

 தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன் வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக புதன் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 15-ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் அங்கன்வாடி மையங்களை நம்பியுள்ள குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சத்துணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, 40 ஆயிரம் காலிப் பணியிடங் களையும் உடனடியாக நிரப்பவேண்டும்.

1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவுக்காக காய் கறி வாங்கவும் சமைக்கவும் தலா ரூ. 1.30-ம், 6 முதல் 10-ஆம் வகுப்புவரை தலா ரூ. 1.40-ம் தமிழக அரசு வழங்குகிறது.

இப்போதுள்ள விலை வாசியில் இநதத் தொகையில் காய்கறி வாங்கவோ, சமைக்கவோ முடியாது. இதனால் ஊட்டச் சத்து இல்லாமல் குறைகளோடு குழந்தைகள் வளரவேண்டிய நிலை ஏற்படும்.

சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் மிகச்சிறப்பாக செயல்படவும், குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச் சத்து கிடைக்கவும் காய்கறிகள் வாங்கவும், சமைக்கவும் ஒருகுழந்தைக்கு ரூ.5 ஒதுக்க வேண்டும். இதை செலவாகப் பார்க்காமல் ஏழை குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் செய்யும் முதலீடாகப் பார்க்கவேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.