நாட்டின் வளர்ச்சிக்கு நிலம் கையகப் படுத்துதல் சட்டம் மிகவும் அவசியம்

 நாட்டு நலன்கருதி நிலம் கையகப்படுத்தும் சட்டமசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய நகர்ப்புறவளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிலக்கரி சுரங்கம், கனிமச்சுரங்க மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. முக்கியமான மசோதாக்கள் நிறைவேற ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்கு நிலம் கையகப் படுத்துதல் சட்டம் மிகவும் அவசியம். இந்தமசோதா சட்டமானால் நாட்டில் தொழில்வளர்ச்சி ஏற்படும். அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆதாயத்தை எதிர்பார்த்து இந்த சட்டத்துக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் மீதான அக்கறையால் இந்தச்சட்டத்தை ஜெயலலிதா ஆதரித்துள்ளார்.

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏராளமான மசோதாக்களுக்கு திமுக ஆதரவு அளித்தது. அப்போது ஆதாயத்தை எதிர்பார்த்துத்தான் திமுக ஆதரவு அளித்ததா? என்பதை அவர் விளக்க வேண்டும்.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்: சட்டம்- ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு பொறுப்பல்ல. சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

மத்திய பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்காக ஏராளமான திட்டங்கள் உள்ளன. நடைபாதைகள், தள்ளு வண்டியில் வியாபாரம் செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் வங்கியில் கடன்பெற வழி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மீத்தேன் எரி வாயு எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் மேம்பாட்டுக்கு பாஜக அரசு துணையாக இருக்கும் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...