அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

 ஆந்திராவில் அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழிசை சவுந்தர ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், உறுப்பினர்சேர்க்கை மற்றும் 2016 தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டதலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின் போது, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆந்திர வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேருக்கும் மிகுந்த மனவருத்தத்துடன் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தசம்பவம் வன்மையாக கண்டிக்கத் தக்கது.

மரம் கடத்தலுக்கு பின்னால் இருப்பவர்கள் தப்பிக்கும் வகையில், திசை திருப்புவதற்காகவே இது போன்ற சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது, ஆந்திர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக அரசு எச்சரிக்கையாக இருந்து, தொழிலாளர்கள் எல்லை தாண்டு வதை கண்காணித்திருக்க வேண்டும். இந்த செயல் பாடுகளை பார்க்கும்போது, தமிழக அரசு கண்காணிக்க தவறிவிட்டது என்று தோன்றுகிறது.

என்ன காரணத்துக்காக சுட்டு கொல்லப்பட்டார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், யாரும் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்திருக்க கூடாது. காட்டுக்குள் குருவிகளை சுட்டுக் கொல்வது போன்று தொழிலாளர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிதி உதவி வழங்கவேண்டும்.

உண்மையில் நடந்தது என்ன என்பதை அரசியல் தலையீடு இன்றி, இருமாநிலங்களின் நட்புறவில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இரு முதல்–அமைச்சர்களும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பாஜக.வின் தேசிய ஆலோசனை கூட்டத்தில் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும்வகையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் குறித்து வருகிற 28–ந்தேதி டெல்லியில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டம் முடிந்த பின் 29–ந் தேதி முழுமையான தகவல் அறிக்கை சுஷ்மா சுவராஜியிடம் தெரிவிக்கப்படும். தூக்குகயிற்றின் அருகில் சென்றவர்களை காப்பாற்றி கொண்டு வந்தது, மோடியின் அரசு. எனவே தமிழக மீனவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து மாநிலநிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று(நேற்று) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஒருமாத காலம் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பொதுக் கூட்டங்கள், பிரசார இயக்கங்கள் நடத்தப்பட உள்ளன.

எந்தெந்த தொகுதிகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கு தகுந்தார்போல், பிரசார உத்திகளை மேற்கொள்வது மற்றும் 2016 தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...