தமிழக அரசு நொடிந்துபோய் உள்ளது

 தமிழக அரசு இன்றைக்கு நொடிந்துபோய் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிக்கை அவர் அளித்த பேட்டியில்,

தமிழகம் ஆக்கப் பூர்வமான அரசியலுக்கு முன்னேறவேண்டும். உணர்ச்சி அரசியலில் இருந்து வெளியேற வேண்டும். தமிழ் உணர்வு, மொழிபற்றில் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. வளர்ச்சி பாதைதான் நமக்கு முக்கியம். தேசியகட்சிக்கு, மாநிலத்தின் மீது அக்கறை இருக்காது என்று சொல்கிறார்கள். எங்களுக்கு மாநிலத்தின் மீது அக்கறை உள்ளது . அந்தவகையில் மத்திய அரசு சார்ந்த மாநிலத்திற்கான திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறோம்.

செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்கள் மக்களிடத்தில் வரவேற்புபெற்று இருக்கிறது. மக்களுக்கான மத்திய அரசு என்ற திட்டத்தின் மூலம் மக்களைதேடி அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக குழுசெல்கிறது. இது 42 மாவட்டங்களில் மே 1-ந் தேதி முதல் ஒவ்வொரு சனிக் கிழமையும் செயல்படுத்தப்பட உள்ளது.

கூட்டணி முடிவு என்பது தனி நபர் நிர்ணயிப்பது அல்ல. கட்சியின் உயர்மட்ட குழு முடிவுசெய்யும். அதற்கான நேரத்தில் எங்கள் கருத்தை நாங்கள் தெரிவிப்போம். தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக வரவேண்டும் என்பதே எங்கள் லட்சியம். அந்த வகையில் பாரதீய ஜனதா பலம்வாய்ந்த கட்சியாக மாறி வருகிறது.

ஊழலற்ற நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மக்களுக்கான அரசு நடக்கவேண்டும். தமிழகத்தில் பலதிட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் பாதியில் நிற்கிறது. நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் வேலைபார்க்க முடியாதோ? என்ற சந்தேகம் ஏற்பட்டு வருகிறது.

நொடிக்குநொடி மக்களுக்காக, மக்கள் நல பணிகளுக்காக செயல்படவேண்டிய தமிழக அரசு இன்றைக்கு நொடிந்துபோய் உள்ளது. வழக்கமாக நடக்க வேண்டிய மக்கள்பணி கூட, ஏதோ வழக்கை எதிர் நோக்கி தேங்கிநிற்கிறது. இது மாறவேண்டும என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...