அதிமுக-பாஜக இடையே நட்பு எதுவும் இல்லை

 அதிமுக-பாஜக இடையே நட்பு எதுவும் இல்லை என்று பாஜக தேசிய பொதுசெயலாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.

பாஜக தேசிய பொதுசெயலாளர் முரளிதர் ராவ், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது முரளிதர்ராவ் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் பிரச்சினையை பாஜக உன்னிப்பாக கவனித்துவருகிறது. மீனவர்கள் கொல்லப் படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப் பட்ட படகுகளையும் விடுவிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

விரைவில், தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும். தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக, தமிழக பாஜக சார்பில் டெல்லியில் 27ம் தேதி கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், தமிழக மீனவ பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.

இறுதியில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகுறித்து, 29ம் தேதி மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை மீனவபிரதிநிதிகள் சந்தித்து தெரிவிப்பார்கள். இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்டகேள்விகளும், அதற்கு முரளிதர் ராவ் பதிலளித்தார்.

கேள்வி:- ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து?

பதில்:- அந்த சம்பவத்திற்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. ஆந்திர காவல் துறையினர் தற்காப்புக்காக கொலை செய்ததாக கூறுவது நம்பும் படியாக இல்லை. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக நாங்கள் நினைக்க வில்லை. இந்த விஷயத்தில் ஆந்திர அரசு தெளிவான நிலைப் பாட்டை எடுக்க வேண்டும்.

கேள்வி:- மேகதாது குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறதே?

பதில்:- மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இதுதொடர்பாக, தமிழக விவசாயிகள் கொண்டுள்ள கவலையில் நியாயம் உள்ளது. பாஜக சரியான நிலைப் பாட்டை எடுக்கும்.

கேள்வி:- நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பாஜக வில் உள்ள கூட்டணி கட்சிகளே எதிர்த்த நிலையில் அதிமுக ஆதரித்துள்ளதே?

பதில்:- அதில் உள்ள நன்மைகருதி அதிமுக ஆதரித்தது. பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்புதெரிவித்த நிலையில், அதிமுக ஆதரித்தது. இருந்தாலும், அதிமுக – பாஜக இடையே நட்பு எதுவும்கிடையாது. எங்கள் கூட்டணியிலும் அவர்கள் இல்லை. இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...