நேபாளத்தில் கடும் நிலநடுக்கம்

 நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்துவிழுந்து மிகப்பெரிய அளவில் பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 500பேர் வரை பலியாகி இருக்கலாம் என ஏஜென்சிசெய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.4 என்ற அளவில் பதிவானதாக தகவல் வெளியானது. அதன் பின்னர், மக்கள்தொகை அதிகம் உள்ள தலை நகர் காட்மாண்டுவை உலுக்கிய நில நடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவாகியிருந்தது தெரியவந்தது. குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் அலறியபடி வெளியேறி சாலைகளில் குழுமினர்.

எங்கு திரும்பினாலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பிய படி சென்றன. அரசு ஹெலி காப்டர்கள் வானில் வட்டமடித்தபடி மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளன.

காட்மாண்டுவில் இருந்த 19ம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்துவிழுந்தது. அக்கட்டடத்தில் இருந்த 400 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ஒருவரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது.

பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டடம் 61.88 மீட்டர் உயரமானது. காட்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப் பகுதியில் 1832ம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டடம் அதன் கட்டடக்கலைக்காக யுனோஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

இதனிடையே மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப் பட்டிருப்பதால், காட்மாண்டுவில் உள்ள விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.

பழைய காட்மாண்டு நகரில் உள்ள ஒருபகுதியில் குறுகிய சந்தில் உள்ள வீடுகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து நொறுங்கின. உயிரிழப்பு தொடர்பான தகவல் வெளியாக வில்லை. மேலும் பல நில அதிர்வுகள் ஏற்படவாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெளியில் இருக்கும்படி நேபாளத்தின் தேசிய வானொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...