மார்க்சியவாதிகள் வரலாற்றை திரிப்பவர்கள்

 மார்க்சியவாதிகள் வரலாற்றை எப்படியெல்லாம் திரிப்பவர்கள் என்பது நாம் அறிந்ததுதான். அதுமீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. மார்க்சியவாதியான அருணன் காலந்தோறும் பிராமணியம் என்ற நூலை ஏழு பாகமாக எழுதியிருக்கிறார். அதில் 6வது பாகத்தில் 116வது பக்கத்தில் ஜனசங்கத்தை விமர்சித்து இப்படி எழுதுகிறார் :-

‘‘ஏற்கனவே குறிப்பிட்டதுபோல 1952 தேர்தலில் பெரிய வெற்றி இல்லையென்றாலும் 3.1% வாக்குகள் பெற்று தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுவிட்டது ஜனசங்கம். அத்வானி பொறுப்பில் இருந்த ராஜஸ்தானில் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தார்கள். இவர்கள் எல்லாம் யார் தெரியுமா? அத்வானி எழுதுகிறார் ‘ஜனசங்கம் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எட்டு எம்.எல்.ஏக்களுமே ஜாகிர்தார்களாக இருந்தார்கள்’ ஆக. யாரை நம்பி அங்கே கட்சி ஆரம்பித்தார்கள் என்பது நிச்சயமாகிறது. ஜாகிர்தார்கள் எனப்பட்டவர்கள் ஜமீந்தார்கள் போல பெரும் பெரும் நிலப்பிரபுக்கள் என்பதை அறிவோம். ஜாகிர்தாரி முறையை ஒழிக்க வேண்டும் என்கிற மக்கள் இயக்கம் வீறுகொண்டு எழுந்தபோது ஜனசங்கமும் அதை ஆதரித்தாக வேண்டிய இக்கட்டான நிலை உருவானது. அப்போது இவர்களில் ஆறுபேர் அதை ஏற்கவில்லை. வெளிப்படையாக அதை எதிர்த்தார்கள் என்கிறார் அத்வானி. நிலப்பிரபுத்துவத்தின் சமூகக் கட்டமைப்பாகிய பிராமணியத்தின் பிரதிநிதியாக மட்டுமல்ல அதன் பொருளாதாரக் கட்டமைப்பாகிய நிலப்பிரபுக்களின் பிரதிநிதியாகவும் ஜனசங்கம் பிறப்பெடுத்தது. பாமர மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காகத் தாங்களும் ஜாகிர்தாரி முறையை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். அந்தத் தந்திரத்தை ஏற்காத ஜாகிர்தார்களை கட்சிக் கட்டுப்பாடு கருதி கண்டித்தார்கள்.’’

இதுதான் மார்க்சிய அறிஞர்(?) அருணன் சொல்லியிருக்கும் ஜனசங்கத்தின் கதை. ஜனசங்கத்தை நிலப்பிரபுக்களின் பிரதிநிதியாக, பிராமணியத்தின் பிரதிநிதியாக கட்டமைத்திருக்கிறார் அருணன். மார்க்சிய அறிஞர்கள் வரலாற்றை எப்படி திரிப்பார்கள், எழுதுவார்கள் என்று அருண்சோரி புத்தகங்களை படித்தாலே விளங்கிக் கொள்ளலாம். வரலாற்றை திரிப்பதில், மறைப்பதில் அருணன் போன்ற மார்க்சிய அறிஞர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது இவர்கள் எழுதிய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள மூல புத்தகங்களை படிக்கும்போது நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு திரிபை இந்த அவர் எழுதிய காலந்தோறும் பிராமணியம் புத்தகத்தில் செய்துள்ளார். ஜாகிர்தார் முறையை ஒழிக்க பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுபேர் எதிர்த்தார்கள் என்று சொன்ன அருணன் அதன் முடிவை சொல்லாமல் மறைத்துவிட்டார். மேலும் கண்டித்தார்கள் என்று முடிவுரையை எழுதிவிட்டார்.

ஆனால் ஜாகிர்தார் முறையை ஒழிக்க பாஜக எந்த அளவுக்கு போனது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால், பாஜகவின் முடிவு என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் அருணன் குறிப்பிட்டிருக்கிற திரு.அத்வானி எழுதிய புத்தகத்தை நாம் படிக்க வேண்டும்.

நாம் படிக்காமல் விடுவோமா? படித்ததன் விளைவு அருணன் போன்றவர்களின் முகமூடி கிழிகிறது.

முதல் பொதுத்தேர்தல் 1952ல் நடைபெற்றது.

இனி திரு.அத்வானி எழுதுகிறார் :

ராஜஸ்தான் சட்டமன்றத்தேர்தலில் 8 இடங்களில் எங்கள் கட்சி வெற்றிபெற்றது. அப்போது ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 160.  எதிர்பார்க்கப்பட்டது போலவே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தது. சீக்கிரத்திலேயே ஜனசங்கத்தின் சட்டமன்ற கட்சியில் கருத்துவேறுபாடு எழுந்தது. அதன் விளைவாக 8 எம்.எல்.ஏக்களில் 6பேரை கட்சித் தலைமை கட்சியை விட்டே நீக்கிவிட்டது. விடுதலைக்கு முன்பு ராஜஸ்தான் 19 மன்னராட்சி மாநிலங்களாக இருந்தது. 1950க்கு முன்பு தான் இந்த மன்னராட்சிப் பகுதிகளும் நாட்டின் மற்ற மன்னராட்சிப் பகுதிகளும் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டன.

ஆனாலும் சில குடும்பங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உரிமை கொண்டாடும் ஜாகீர்தார் முறை தொடர்ந்து கொண்டிருந்தது. டாக்டர் முகர்ஜி மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாவின் வலியுறுத்தலின் பேரில் ஜாகீர்தாரி முறை ஒழிப்பு கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பாரதிய ஜனசங்க வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எட்டு பேரும் ஜாகீர்தார்களாக இருந்துவிட்டார்கள். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதுபோல ஜாகீர்தாரி முறையை ஒழிக்க சட்டமன்றத்தில் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என கட்சி தீர்மானித்த து. அதற்கு 6 எம்.எல்.ஏக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. பைரோன் சிங்க செகாவத், ஜகத் சிங் ஜாலா ஆகியோர் மட்டும் ஜாகீர்தாரி ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆறு எம்.எல்.ஏக்களின் நிலையை கட்சி தலைமைக்குத் தெரியப்படுத்தினர். டாக்டர் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகிய இருவரும் ஜெய்ப்பூர் வந்து அந்த ஆறு எம்.எல்.ஏக்களுடன் தனித்தனியே பேசினார்கள். எம்.எல்.ஏக்கள் தங்கள் நிலையில் இருந்து  மாறவில்லை. ‘கட்சி கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. அதனால் அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்’ என்றனர்.

செகாவத் விரைவிலேயே ராஜஸ்தான் ஜனசங்கத்தின் மக்களைக் கவர்ந்த தலைவராக உயர்ந்து விட்டார். மூன்றுமுறை ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக ஆனார். 2002ல் இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும் ஆனார். 1952ல் ஜாகிர்தாரி முறை ஒழிப்பு விஷயத்தில் அவர் எடுத்த துணிவான மற்றும் கொள்கை ரீதியான முடிவு அவரது அடுத்தடுத்த அரசியல் வெற்றிகளுக்கு முக்கியமான அடித்தளமாக அமைந்தது எனலாம்.

நூல் : என்தேசம் என் வாழ்க்கை, எல்.கே.அத்வானி, பக்கம் :109-110

வெறும் எட்டு  எம்.எல்.ஏக்களை கொண்ட ஜனசங்கம், தனது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத ஆறு எம்.எல்.ஏக்களை கட்சியைவிட்டு நீக்கியது என்பது வேறு கட்சிகளின் வரலாற்றில் நடக்க முடியாத  ஒரு மாபெரும் சம்பவம். வேறு எந்த கட்சியும் தனது கொள்கைக்காக தங்களது எம்.எல்.ஏக்களை விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் பாஜக அதை செய்தது. மொத்தமே எட்டு எம்.எல்.ஏக்கள் எனும்போது ஆறு எம்எல்ஏக்களை நீக்குகிறது என்றால் அதனுடைய கொள்கை கடைபிடிப்பு என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதுதான் கொள்கைக்காக தியாகம் செய்வது. இது பாரதிய ஜனசங்கத்திற்கு இயல்பிலேயே இருக்கும் பண்பு. மற்ற கட்சிகளில் எதிர்பார்க்க முடியாது. இன்றும் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சிக்கு விரோதமாக போய்விட்டால் அவரை நீக்குவது கிடையாது. காரணம் தங்கள் கட்சியின் பலம் குறைந்துவிடும் என்ற காரணம்தான். ஆனால் பாஜக அப்படி செய்யவில்லை. தங்கள் பலம் குறைந்தாலும் பரவாயில்லை. கொள்கை முக்கியம் என்று முடிவெடுத்தார்கள்.

பாரதிய ஜனசங்கத்தின் இந்த தியாகத்தை மறைத்துதான், திரித்துதான் மார்க்சிய எழுத்தாளர் அருணன் ‘கண்டித்தார்கள்’ என்று மட்டும் எழுதி ‘கட்சியை விட்டு நீக்கியதை’ மறைத்த நியாயமான(?) எழுத்தாளர்.

இதுமட்டுமல்ல.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொண்டிருந்தது. அதற்காக விவசாய நிலங்களில், நில உச்சவரம்பு சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைபடுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரியது. இந்தக் கொள்கையை தீன்தயாள்ஜி ஆதரித்து இருந்தார். கட்சியின் செயற்குழு அதற்கு அங்கீகாரம் அளித்தது. இந்த ஆதரவு நிலையை, பாரதிய ஜனதா  கட்சியைச் சார்ந்த பால்ராஜ் மதோக் என்பவர் தவறு என்று எதிர்த்தார். ஏழை எளிய மக்களுக்கு எதிராக இருந்த அவரை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கினார் அத்வானி அவர்கள்.

 

ஜனசங்கம் ‘ஏகாத்ம மானவ வாதம்’ என்னும் தீன்தயாள்ஜியின் தத்துவத்தை 1965ல் நடந்த விஜயவாடாவில் நடந்த மாநாட்டில் வழிகாட்டிக் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி அதன் விதிமுறைகளில் கட்சியின் அடிப்படை தத்துவமாக அதை ஏற்றுக் கொண்டது. பின்பு அத்தத்துவம் புத்தகமாக வெளியிடப்பட்டது.  அதில் தீன்தயாள்ஜி குறிப்பிடுகிறார் :- ‘தங்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்களாக பிற மனிதர்களை கருதிடும் அளவிற்கு மனிதர்களை இட்டுச் சென்று அதன் மூலம தேசிய ஒற்றுமைக்கு அபாயம் தோற்றுவித்திடும் தீண்டாமை போன்ற தீமைகளால் சமுதாயம் இன்று பீடிக்கப்பட்டுள்ளதென்றால் அத்தீமைகளை ஒழித்தாக வேண்டும்’(பக்.95) என்று அவர் குறிப்பிடுகிறார்.

இதையெல்லாம் மறைத்துதான் அருணன் போன்ற எழுத்தாளர்கள் பிராமணியத்தை ஆதரித்தார்கள், ஜாகிர்தார் முறையை ஆதரித்தார்கள் என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரத்தை கட்டமைத்து வருகிறார்கள்.

நாம் எப்போதுமே ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திராவிட இயக்க எழுத்தாளர்கள், கம்யூனிச எழுத்தாளர்கள் ஏதாவது எழுதினால் அதை உண்மை என்று உடனே நம்பிவிடக்கூடாது. அவர்கள் குறிப்பிடும் மூலநூலை கண்டிப்பாக படிக்க வேண்டும். நாம் அப்படி படிக்காமல் போனதன் விளைவுதான், இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவராமல் போனதன் விளைவுதான் இன்று அவர்கள் மாபெரும் எழுத்தாளர்கள், நடுநிலை எழுத்தாளர்கள் என்ற பெயரை பெற்றிருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த மாயைகள் உடையும் வெகுநாள் இல்லை. நமக்கான வெற்றிகள் எட்டிவிடும் தூரம்தான். அந்த தூரத்தை கடக்க நாம் நிறைய படிக்க, பரப்ப வேண்டும். அவ்வளவுதான்.

நன்றி ; மா.வெங்கடேசன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...