சமூக பாதுகாப்பு திட்டங்களை 9-ம் தேதி கொல்கத்தாவில் தொடக்கி வைக்கும் பிரதமர்

 மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களான பிரதமரின் விபத்துக்காப்பீடு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீடுதிட்டம், முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் பெயரிலான அடல் ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திரமோடி, வரும் 9-ம் தேதி கொல்கத்தாவில் தொடக்கி வைக்கிறார்.

பொது மக்களுக்கு ஆயுள், விபத்து காப்பீடு திட்டங்களும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டமும் செயல் படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்ததிட்டங்கள் தொடர்பாக நிதி அமைச்சகம் வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விபத்துக் காப்பீடு: வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயதுக்குள்பட்ட அனைவரும் விபத்துக்காப்பீடுத் திட்டத்தில் இணையலாம்.

ஓராண்டு புதுப்பிக்கத்தக்க இத்திட்டத்தில், பாலிசி தாரர்களிடமிருந்து காப்பீட்டு கட்டணமாக (பிரிமீயம்) ஆண்டுக்கு ரூ.12 வசூலிக்கப்படும்.

பாலிசிதாரர்கள் விபத்தில் இறந்தாலோ, அவர்களுக்கு ஊனம் ஏற்பட்டாலோ, விபத்துகாப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

விருப்பமுள்ள பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது இதர பொதுகாப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் நிர்வகிக்கப்படும்., ஆயுள் காப்பீடு: வங்கியில் சேமிப்புகணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயதுக்குள்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

ஓராண்டு புதுப்பிக்கத்தக்க இத்திட்டத்தில் பாலிசி தாரர்களிடமிருந்து, ஆண்டுக்கு ரூ.330 காப்பீட்டுக் கட்டணம் பெறப்படும். எந்தவொரு காரணத்தாலும் பாலிசிதாரர் இறக்கநேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் அளிக்கப்படும். ஆயுள்காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) அல்லது விருப்பமுள்ள பிற ஆயுள்காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஓய்வூதியத் திட்டம்: வருமான வரி செலுத்தாவர்கள், இதர ஓய்வூதிய திட்டங்களில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் ஆகியோர் இந்தத்திட்டத்தில் இணையலாம்.

அமைப்பு சாரா தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்ததிட்டத்தில், வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 40 வயதுக்குள்பட்டவர்கள் சேரலாம்.

அவர்கள் 20 ஆண்டுகளோ அல்லது அதற்குமேலோ செலுத்தும் சந்தா தொகையின் அடிப்படையில், அவர்களது 60-ஆவது வயதிலிருந்து ரூ.1,000 முதல் ரூ. 5,000 வரை, குறைந்த பட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும்.

நிகழ் ஆண்டில், டிசம்பர் 31-ம் தேதிக்குமுன்பு இந்தத்திட்டத்தில் இணைபவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான சந்தாதொகையில் 50 சதவீதம் அல்லது ஆண்டுக்கு தலா ரூ.1,000 இவற்றில் எதுகுறைவோ, அந்தத் தொகையை மத்திய அரசு செலுத்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.