நாடு முழுவதும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்க முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கதி சக்தி திட்டம் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசியவர் பிரதமரின் கதிசக்தி திட்டம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மிகப் பெரிய பங்குவகிக்கும் எனக் கூறினார்.
தரமான கட்டமைப்புகளை கட்டுவதற்கான வழிகளை ஆராயவேண்டும் என்றும், அது விலைமலிவாக இருப்பதோடு, பேரழிவுகளை தாங்கும் வகையில் நீடித்து நிற்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஒருங்கிணைந்த கூட்டாட்சியை வலுப்படுத்த ஏதுவாக மாநில அரசுகளுக்கு ஒருலட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், பன்முனை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலஅரசுகள் இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நெடுஞ்சாலைகள், கண்ணாடி ஒளியிழைகுழாய் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்பட ஒவ்வொரு துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க அரசு முடிவு எடுத்திருப் பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |