மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம், இருலட்சம் இளைஞர்கள் பயனடைவர்

 பிரதமரின் வெளி நாட்டுப் பயணங்களின் மூலம், ஏராளமான அன்னியமுதலீடுகள் குவிந்து வருகின்றன,'' என்று தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான, பாஜக., அரசு பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை, பொது மக்களிடம் தெரியப்படுத்தும் வகையில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, 'மகா மக்கள்தொடர்பு இயக்கம்' மூலம், மத்திய அரசின் சாதனைகள், அச்சிடப்பட்ட காகிதங்கள் மூலம், மக்கள்மத்தியில் கொண்டு செல்லப்படும். கட்சி உறுப்பினர்கள், பொது மக்களை நேரடியாக தொடர்புகொண்டு, பாஜக., அரசின் சாதனைகளை எடுத்துரைப்பர்.

பிரதமரின் வெளிநாட்டு பயணங்களின் மூலம், ஏராளமான அன்னியமுதலீடுகள் குவிந்து வருகின்றன. மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம், இருலட்சம் இளைஞர்கள் பயனடைவர்.

மத்திய அரசின் திட்டங்களால், பிரதமர் மோடி, நாட்டை குழிதோண்டி புதைக்க முயல்வதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. உயர்ந்தகோபுரம், மாளிகை கட்டுவதற்கு, ஆழமான அஸ்திவாரம் தேவை. தற்போது, வறுமையில் சிக்கித்தவிக்கும் நாட்டை, மாடமாளிகையாக மாற்றுவதற்கு தேவையான, அஸ்திவாரக் குழியைதான், பிரதமர் மோடி தோண்டுகிறார்.

தமிழக மீனவர் பிரச்னைகளை தீர்க்கும்வகையில், மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.குழந்தை தொழிலாளர் குறித்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கும், மதிமுக., தலைவர் வைகோ, அவர் எம்.பி.,யாக இருந்தபோது, சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றும், குழந்தை தொழிலாளர்களை காப்பாற்ற, என்ன முயற்சி செய்தார்?

அவர், பாஜக., அரசின் அனைத்து செயல்பாடுகளையும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.தற்போதைய அரசியல் சூழலில், தமிழகத்தில் கூட்டணி குறித்து, எந்த முடிவும் எடுக்கமுடியாது; எனினும், எந்தநேரத்திலும் தேர்தலை சந்திக்க தயார் இவ்வாறு, அவர் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...