பிரதமரின் ‘அனைவருக்கும் வீட்டுவசதி’ திட்டத்தின் கீழ், மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை இன்று காணொலி முறையில் பிரதமர் நரேந்திரமோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “இந்தவீடுகளில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, கழிப்பறை மற்றும் எரிவாயு இணைப்பு என அனைத்து வசதிகளும் இருக்கும். நாட்டில் சமூகபொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முக்கிய ஊடகமாக ‘அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம்’ மாறியுள்ளது.
3.5 கோடி குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றியுள்ளது எங்கள் அரசின் பெரும் அதிர்ஷ்டம். கடந்த 8 ஆண்டுகளில் 3.5 கோடி குடும்பங்களுக்கு புதியவீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்களின் நலனுக்காக மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. வீட்டுவசதி வாரியங்களுக்கு கட்டிடங்கள் கட்ட அரசின் மொத்த செலவு ரூ.22 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது” என தெரிவித்தார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |