பிரதமர் வாஜ்பாயின் குடும்பத்தாரை சந்தித்து விருதை ஒப்படைத்தார்

 வங்கதசே அரசு முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு போர்விடுதலை விருதை வழங்கியது. அவரது சார்பில் விருதைபெற்ற பிரதமர் மோடி அதை வாஜ்பாயின் குடும்பத்தாரை சந்தித்து ஒப்படைத்தார். பிரதமர் நரேந்திரமோடி கடந்த வாரம் வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது வங்கதேச சுதந்திர போராட்டத்தில் அதிக ஈடுபாடுகாட்டிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அந்நாட்டு அரசு போர்விடுதலை விருதை வழங்கியது. விருதை வாஜ்பாய் சார்பில் மோடி பெற்றுக்கொண்டார். வங்கதேசத்தின் உயரிய விருது வாஜ்பாய்க்கு வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அந்தவிருதை எடுத்து கொண்டு மோடி வாஜ்பாயின் வீட்டிற்குசென்று அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாது,

அடல்ஜியை சந்தித்தேன். வங்கதேச அரசு வழங்கிய போர்விடுதலை விருதை அவரது குடும்பத்தாரிடம் அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்து புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மோடியிடம் இருந்து விருதை வாஜ்பாயின் வளர்ப்புமகள் நமீதா பட்டாச்சாரியா மற்றும் அவரது கணவர் ரஞ்சன் பட்டாச்சாரியா ஆகியோர் பெற்று கொண்டனர். மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் வாஜ்பாயின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...